390

4 பாலை

(39) உடன் போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து


390. 1நல்லோ ராங்கட் பரந்துகை தொழுது
    பல்லூழ் 2மறுகி வினவு வோயே
    திண்டோள் வல்விற் காளையொடு
    கண்டன மன்ற சுரத்திடை யாமே,

    எ-து பின்சென்ற செவிலித்தாய் பலரையும் வினாவக்
கண்டோர் தாம் கண்டவாறு அவட்குக் கூறியது.

   குறிப்பு. நல்லோராங்கண்-நல்லோரிடத்தே. பல்லூழ்-பலமுறை
மறுகி-அறிவு சுழன்று. வினவுவோயே : செவிலியை நோக்கியவிளி,
வல்லில் : ஐங். 373 : 5, குறிப்பு. கண்டனெம்-பார்த்தோம். வினவு
வோயே. யாம் சுரத்திடைக் காளையொடு கண்டனெம்.

   (பி-ம்.) 1 ‘நல்லோரங்கட் பரிந்து’ 2‘மறுகின்’ ( 10 )

  (39) உடன்போக்கின்கண் இடைச்சுரத்

துரைத்த பத்து முற்றிற்று.