161


(17) சிறுவெண்காக்கைப் பத்து


161. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
   கருங்கோட்டுப் புன்னைத் தங்குந் துறைவற்குப்
   1பயந்துநுத லழியச் சாஅய்
   நயந்த நெஞ்ச நோய்ப்பா லஃதே.

 எ-து ஒருவழித் தணந்துழி ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலை
மகள் ஆற்றாளாய்ச் சொல்லியது.

 (ப-ரை.) ‘சி.றுவெண்காக்கை............தங்கும்’ என்றது வரைதற்கு
வேண்டுவன முயலாது தன்மனைக்கண்ணே தங்குவான் எ-று.

 குறிப்பு. கரையது-கரையிலுள்ளதான. சிறுவெண்காக்கை :
நற். 31 : 2; குறுந். 334 : 1. குறுந் 246 : 1, 313 : 1, கருங்கோட்டுப்
புன்னை-கரிய கிளைகளையுடைய புன்னை மரம் ; நற். 67 : 5 ; குறுந்.
123 : 3, பயந்து-பசந்து நுதலழிய-நெற்றியினது அழகுஅழிய.
சாஅய்-மெலிந்து. நயந்த-விரும்பிய; நோய்ப்பாலஃது-நோயின்
பகுதியது. (பி-ம்.) 1 ‘பசந்து’     (1)