3. குறிஞ்சி
(30) மஞ்ஞைப் பத்து.
291. மயில்க ளாலக் குடிஞை யிரட்டும் துறுகல் லடுக்கத் ததுவே பணைத்தோள் ஆய்தழை நுடங்கு மல்குற் காதலி யுறையு நனிநல் லூரே.
எ-து வரைவிடைவைத்துப் பிரிந்து மீள்கின்ற தலைமகன் சொல்லியது.
குறிப்பு. குடிஞை இரட்டும்-பேராந்தை மாறி ஒலிக்கும்; மலைபடு. 141. அடுக்கத்தது-பக்கமலையின்கண் உள்ளது. பணைத்தோள்-பெருத்ததோள். காதலி-தலைவி. நல்லூர் துறுகல் அடுக்கத்தது. ( 1 )