எ-து தலைமகன் பெதும்பைப் பருவத்தாள் ஒரு பரத்தையைக்
களவில் மணந்து ஒழுகுகின்றதனை அறிந்த தலைமகள் தனக்கில்லை
யென்று அவன் மறைத்துழிச் சொல்லியது.
குறிப்பு. கண்டனெம்-பார்த்தேம். பெண்டு-காதற்பரத்தை.
வண்டல்-மணலாற் செய்யப்பெற்ற சிற்றிலை. உய்த்தென - கொண்டு
சென்றதென்று. உண்கண்-மையுண்ட கண்கள். அழுது நின்றோ
ளாகிய நின்பெண்டைக் கண்டனெமல்லமோ?
(மேற்.) மு. காமஞ்சாலா இளமையோளைக் களவின்கண் மணந்
தமை யறிந் தேனெனத் தலைவனை நோக்கித் தலைவி கூறியது (தொல்.
கற்பு. 6, ந.). ( 9 )