420

5. முல்லை

(42) கிழவன் பருவம்பாராட்டுப் பத்து


420. பொன்னென மலர்ந்த கொன்றை மணியெனத்
    தேம்படு காயா மலர்ந்த தோன்றியொடு
    நன்னல மெய்தினை புறவே நின்னைக்
    காணிய வருதும் யாமே
    வாணுத லரிவையொ டாய்நலம் படர்ந்தே.

    எ-து குறித்த பருவத்து எய்திய அணித்தாக வந்த தலைமகன்
பருவத்தால் அணிகொண்ட புறவைநோக்கிச் சொல்லியது.

   குறிப்பு. தேம்-இனிமை, புறவே : விளி. புறவே, கொன்றை
யொடும், காயாவொடும், தோன்றியொடும் நலம் எய்தினை; கொன்
றைப் பூவிற்குப் பொன்னும், காயாமலருக்கு நீலமணியும் உவமை
கள். கொன்றைப் பூவிற்குப் பொன் : குறுந். 21 : 1-3 காணிய-
காண வேண்டி. யாம் நின்னைக் காணிய அரிவையொடு நலம்
படர்ந்து வருதும். ( 10 )

(42) கிழவன் பருவம்பாராட்டுப் பத்து முற்றிற்று.