460

5. முல்லை

(46) பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து


460. பெருஞ்சின வேந்தனும் பாசறை முனியான்
    இருங்கலி வெற்பன் றூதுந் தோன்றா
    ததையிலை வாழை முழுமுத லசைய
    இன்னா வாடையு மலைக்கும்
    என்னா குவென்கொ லளியென் யானே.

    எ-து வேந்தற்கு உற்றுழிப்பிரிந்த தலைமகனைப் பருவமுதிர்ச்சி
யினும் வரக்காணாது தலைமகள் சொல்லியது.

    குறிப்பு. பாசறை முனியான்-பாடி வீட்டில் இருத்தலை வெறுக்க
மாட்டான். வெற்பனது தூதும் தோன்றாது. வாழை முழுமுதல்-
வாழையினது பெரிய முதல்; முருகு. 307. இன்னாவாடை-துன்பத்
தைதரும் வாடைக்காற்றும். அலைக்கும்-வருத்தும். என்னாகுவென்
கொல்-என்னாவேனோ. ளியென்-ளிக்கத்தக்கவள். ( 10 )

   (46) பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து முற்றிற்று.