146


(15) ஞாழற்பத்து


146. எக்கர் ஞாழ லரும்புமுதி ரவிழிணர்
    நறிய கமழுந் 1துறைவற்
    கினிய மன்றவென் மாமைக் கவினே.

 எ-து வரைவுகடாவவும் வரையாதொழுகுகின்றுழி, ‘நம்மை
எவ்வகை நினைத்தார் கொல்லோ? என்று ஐயுற்றிருந்த தலைமகள்
வரைவு தலைவந்துழித் தோழிக்குச் சொல்லியது.
 (ப-ரை.) ‘அரும்புமுதிர் ......... துறைவன்? என்றது அவன் அன்பு
முறையால் நிரம்பி வெளிப்பட்ட திறம் கூறியவாறு.
  குறிப்பு. அவிழ்இணர்-மலரும் பூங்கொத்து, நறியகமழும்-நன்
மணம் வீசும். என்மாமைக்கவின் இனிய மன்ற. என் என்றது
தலைவி.
  
(பி-ம்.) 1 ‘துலைவர்க்?     ( 6 )