147


(15) ஞாழற்பத்து


147. எக்கர் ஞாழன் 1மலரின் மகளிர்
   ஒண்டழை யயருந் துறைவன்
   தண்டழை விலையென நல்கின னாடே.

 எ-து சுற்றத்தார் வேண்டிய கொடுத்துத் தலைமகன் வரைவு
மாட்சிமைப்படுத்தமையறிந்த தோழி உவந்த உள்ளத்தாளாய்த்
தலைமகட்குச் சொல்லியது.
  (ப-ரை.) ஞாழல்மலர் இல்லாத மகளிர் அதன் தழையை விரும்
பும் துறைவனென்று உலகை வழங்க வேண்டும் உள்ளத்தன்
அஃதின்மையால் நாட்டை வழங்கினானென்பதாம்.
  குறிப்பு. மலர் இல் மகளிர்-மலரில்லாத மகளிர். அயரும்-விரும்
பும் தழைவிலை என்றது இடக்கர்; முலைவிலை என்றாற்போல,
துறைவன் தழைவிலையென நாடு நல்கினன்.
  (மேற்.) மு. காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக்
குணர்த்தல் (நம்பி. வரைவு, 4). (பி-ம்.) 1 ‘மலரினை மகளிர்?   ( 7 )