301

4 பாலை

(31) செலவழுங்குவித்த பத்து


301, மால்வெள் ளோத்திரத்து மையில் வாலிணர்
அருஞ்சுரஞ் செல்வோர் சென்னிக் கூட்டும்
அவ்வரை யிறக்குவை யாயின்
மைவரை நாட வருந்துவள் பெரிதே,

   எ-து பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகற்குச் சொல்லியது.

   (ப-ரை) வெள்ளிலோத்திரத்துக் குளிர்ச்சியையுடைய மலரை
ஆற்றின் வெம்மைதீரச் செல்வோர் அணிந்து செல்வரென்றுழி
வெம்மை கூறியவாறாயிற்று.

  குறிப்பு. வெள்ளோத்திரம்-பாலை நிலமரம். மையில் வாலிணர் -
குற்றமில்லாத வெண்மையான பூங்கொத்தை;” “வெள்ளிலோத்திரம்
விளங்கும் வெண்மலர்” (சீவக. 2685.) வென்னிக் கூட்டும் - கூந்த
லில் வைக்கும். இறக்குவையாயின் - கடந்து செல்வாயானால். நாட,
பெரிது வருந்துவள்.                                ( 1 )