217

3. குறிஞ்சி

(21) அன்னாய்வாழிப் பத்து


217. பெருவரை வேங்கைப் பொன்மரு ணறுவீ
   மானினப் பெருங்கிளை மேய லாரும்
   கானக நாடன் வரவுமிவண்
   மேனி 1பசப்ப தெவன்கொ லன்னாய்

   எ-து வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் மீட்சியுணர்ந்த
தோழி ஆற்றாளாகிய தலைமகட்குச் சொல்லியது.

  (ப-ரை.) இவணென்றது இவ்விடத்து எ-று. வேங்கைப் பூவை
மானினம் ஆருமென்றது அவன்மனைப் பெருஞ்செல்வம் நின்கிளை
யாகிய நாங்களும் நின்னோடு நுகர்வேமென்பதாம்.

  குறிப்பு. . வேங்கைப் பொன் மருள் நறுவீ-வேங்கை மரத்தினது
பொன்னொத்த நறிய மலர். மானினம்-மான் கூட்டம். மேயல் ஆரும்-
மேய்கின்ற. வேங்கைப் பூவை மான்கள் உண்ணுதல் : புறநா.
224 : 14-6.

   (பி-ம்.) 1 ‘பசப்பறைவ? ( 7 )