81 | | குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை | | அரிப்பறை வினைஞர் அல்குமிசைக் கூட்டும், | | மலர் அணி வாயில் பொய்கை, ஊர! நீ | | என்னை 'நயந்தனென்' என்றி; நின் | 5 | மனையோள் கேட்கின், வருந்துவள் பெரிதே. | |
| தன்னைக் கொடுமை கூறினாள் தலைமகள் என்பது கேட்ட பரத்தை, தலைமகன் வந்து தன்மேல் அன்புடைமை கூறினானாக, அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. 1 | | |