தொடக்கம்   முகப்பு
கயல்
9
'வாழி ஆதன், வாழி அவினி!
நன்று பெரிது சிறக்க! தீது இல்லாகுக!'
என வேட்டோளே, யாயே: யாமே,
'கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்
5
தண் துறை ஊரன் கேண்மை
அம்பல் ஆகற்க!' என வேட்டேமே.
இதுவும் அது. 9
 

 
36
அம்ம வாழி, தோழி! ஊரன்
நம் மறந்து அமைகுவன் ஆயின், நாம் மறந்து
உள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னே
கயல் எனக் கருதிய உண் கண்
5
பசலைக்கு ஒல்காவாகுதல் பெறினே.
தான் வாயில் நேரும் குறிப்பினளானமை அறியாது, தோழி வாயில் மறுத்துழி, அவள் நேரும் வகையால் அவட்குத் தலைமகள் சொல்லியது. 6

 
111
அம்ம வாழி, தோழி! பாணன்
சூழ் கழிமருங்கின் நாண் இரை கொளீஇச்
சினைக் கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை
பிரிந்தும் வாழ்துமோ நாமே
5
அருந் தவம் முயறல் ஆற்றாதேமே?
'இற்செறிப்பார்' எனக் கேட்ட தலைமகள் வரையாது வந்து ஒழுகும் தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியது. 1

 
மேல்