தொடக்கம்
முகப்பு
காயா
412
காயா, கொன்றை, நெய்தல், முல்லை,
போது அவிழ் தளவமொடு பிடவு, அலர்ந்து கவினிப்
பூ அணி கொண்டன்றால் புறவே
பேர் அமர்க்கண்ணி! ஆடுகம், விரைந்தே.
இதுவும் அது. 2
உரை
420
பொன் என மலர்ந்த, கொன்றை; மணி எனத்
தேம் படு காயா மலர்ந்த; தோன்றியொடு
நன்னலம் எய்தினை, புறவே! நின்னைக்
காணிய வருதும், யாமே
5
வாள் நுதல் அரிவையொடு ஆய் நலம் படர்ந்தே.
குறித்த பருவத்து எய்திய, அணித்தாக வந்த தலைமகன் பருவத்தால் அணிகொண்ட புறவை நோக்கிச் சொல்லியது. 10
உரை
மேல்