தொடக்கம்   முகப்பு
குயில்
341
அவரோ வாரார்; தான் வந்தன்றே
குயில் பெடை இன் குரல் அகவ,
அயிர்க் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே!
தலைமகன் பிரிந்துழிக் குறித்த பருவம் வரக்கண்ட தலைமகள் சொல்லியது.
இனி வருகின்ற பாட்டு ஒன்பதிற்கும் இஃது ஒக்கும்.
 

 
346
அவரோ வாரார்; தான் வந்தன்றே
அம் சினைப் பாதிரி அலர்ந்தென,
செங் கண் இருங் குயில் அறையும் பொழுதே! 6
 

 
369
வள மலர் ததைந்த வண்டு படு நறும் பொழில்
முளை நிரை முறுவல் ஒருத்தியொடு, நெருநல்
குறி நீ செய்தனை என்ப; அலரே,
குரவ நீள் சினை உறையும்
5
பருவ மாக் குயில் கௌவையின், பெரிதே!
பரத்தை ஒருத்தியுடன் பொழிலகத்துத் தங்கி வந்த தலைமகன் தலைமகள் வினாயவழி, 'யாரையும் அறியேன்' என்றானாக, அவள் கூறியது. 9
 

 
மேல்