தொடக்கம்   முகப்பு
குரவம்
344
அவரோ வாரார்; தான் வந்தன்றே
நறும் பூங் குரவம் பயந்த
செய்யாப் பாவை கொய்யும் பொழுதே! 4
 

 
357
குரவம் மலர, மரவம் பூப்ப,
சுரன் அணி கொண்ட கானம் காணூஉ,
'அழுங்குக, செய்பொருள் செலவு!' என விரும்பி, நின்
அம் கலிழ் மாமை கவின
5
வந்தனர் தோழி! நம் காதலோரே.
பொருள்வயிற் பிரிந்து ஆண்டு உறைகின்ற தலைமகன் குறித்த பருவ வரவு கண்டு, கடிதின் மீண்டு வந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது. 7

 
369
வள மலர் ததைந்த வண்டு படு நறும் பொழில்
முளை நிரை முறுவல் ஒருத்தியொடு, நெருநல்
குறி நீ செய்தனை என்ப; அலரே,
குரவ நீள் சினை உறையும்
5
பருவ மாக் குயில் கௌவையின், பெரிதே!
பரத்தை ஒருத்தியுடன் பொழிலகத்துத் தங்கி வந்த தலைமகன் தலைமகள் வினாயவழி, 'யாரையும் அறியேன்' என்றானாக, அவள் கூறியது. 9
 

 
மேல்