தொடக்கம்   முகப்பு
குவளை
72
வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழைத்
திதலை அல்குல், துயல்வரும் கூந்தல்,
குவளை உண்கண், ஏஎர் மெல்லியல்
மலர் ஆர் மலிர்நிறை வந்தென,
5
புனல் ஆடு புணர்துணை ஆயினள், எமக்கே.
தலைமகள் புலவி நீக்கித் தன்னோடு புதுப் புனல் ஆட வேண்டிய தலைமகன் களவுக் காலத்துப் புனலாட்டு நிகழ்ந்ததனை அவள் கேட்பத் தோழிக்குச் சொல்லியது. 2

 
73
வண்ண ஒண் தழை நுடங்க, வால் இழை
ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தென,
கள் நறுங் குவளை நாறித்
தண்ணென்றிசினே பெருந் துறைப் புனலே.
இதுவும் அது. 3

 
225
அம்ம வாழி, தோழி! பைஞ் சுனைப்
பாசடை நிவந்த பனி மலர்க் குவளை
உள்ளகம் கமழும் கூந்தல் மெல்லியல்
ஏர் திகழ் ஒள் நுதல் பசத்தல்
5
ஓரார்கொல் நம் காதலோரே?
மெலிவு கூறி வரைவு கடாவக் கேட்ட தலைமகன் தான் வரைதற்பொருட்டால் ஒருவழித் தணந்து நீட்டித்தானாக, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி கூறியது. 5
 

 
299
குன்ற நாடன் குன்றத்துக் கவாஅன்,
பைஞ் சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும்
அம் சில் ஓதி அசைநடைக் கொடிச்சி
கண்போல் மலர்தலும் அரிது; இவள்
5
தன் போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய நிலைமைக்கண், தலைமகள் ஆய வெள்ளத்தோடு கூடி நிற்கக் கண்ட தலைமகன் மகிழ்ந்த உள்ளத்தானாய்த் தன்னுள்ளே சொல்லியது. 9
 

 
500
கொன்றைப் பூவின் பசந்த உண்கண்,
குன்றக நெடுஞ் சுனைக் குவளை போல,
தொல் கவின் பெற்றன இவட்கே வெல் போர்
வியல் நெடும் பாசறை நீடிய
5
வய மான் தோன்றல் நீ! வந்தமாறே.
 

 
மேல்