தொடக்கம்   முகப்பு
செம்பூழ்
469
பைந் தினை உணங்கல் செம் பூழ் கவரும்
வன்புல நாடன் தரீஇய, வலன் ஏர்பு
அம் கண் இரு விசும்பு அதிர, ஏறொடு
பெயல் தொடங்கின்றே வானம்;
5
காண்குவம்; வம்மோ, பூங் கணோயே!
பிரிவு நீட ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி 'அவரை நமக்குத் தருதற்கு வந்தது காண் இப் பருவம்' எனக் காட்டி வற்புறீஇயது. 9
 

 
மேல்