தொடக்கம்   முகப்பு
தனது குட்டியையே முதலை தின்னும்.
24
தாய் சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு
பிள்ளை தின்னும் முதலைத்து அவன் ஊர்
எய்தினன் ஆகின்று கொல்லோ? மகிழ்நன்
பொலந் தொடி தெளிர்ப்ப முயங்கியவர்
5
நலம் கொண்டு துறப்பது எவன்கொல்? அன்னாய்!
'பரத்தையருள்ளும் ஒருத்தியை விட்டு ஒருத்தியைப் பற்றி ஒழுகுகின்றான்' என்பது கேட்ட தோழி, வாயிலாய் வந்தார் கேட்ப, தலைமகட்குச் சொல்லியது. 4

 
92
கருங் கோட்டு எருமைச் செங் கண் புனிற்று ஆ
காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும்
நுந்தை, நும் ஊர் வருதும்
ஒண் தொடி மடந்தை! நின்னை யாம் பெறினே.
'நினக்கு வரைந்து தருதற்குக் குறை நின் தமர் அங்கு வந்து கூறாமையே' எனத் தோழி கூறினாளாக, தலைமகள் முகம் நோக்கி, 'இவள் குறிப்பினால் கூறினாள்' என்பது அறிந்த தலைமகன், 'வரைவு மாட்சிமைப்படின் நானே வருவல்' எனத் தலைமகட்குச் செ

 
மேல்