தொடக்கம்   முகப்பு
தலைவி
11
மனை நடு வயலை வேழம் சுற்றும்
துறை கேழ் ஊரன் கொடுமை நாணி,
'நல்லன்' என்றும், யாமே;
'அல்லன்' என்னும், என் தட மென் தோளே.
பாணன் முதலாயினார்க்குத் தலைமகன் கொடுமை கூறி வாயில் மறுத்த தலைமகள், கழறிய பாங்கற்கு வாயில் நேர்வாள், சொல்லியது. 'தலைவன் எவ்வாறு தப்பி ஒழுகினும், அவன் கொடுமை நின்னால் புலப்படுதல் தகாது' என்று கழறிய பாங்கிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். 1

 


 
12
கரை சேர் வேழம் கரும்பின் பூக்கும்
துறை கேழ் ஊரன் கொடுமை நன்றும்
ஆற்றுகதில்ல, யாமே;
தோற்கதில்ல, என் தட மென் தோளே.
உழையர் நெருங்கிக் கூறிய திறமும் தனது ஆற்றாமையும் நினைந்து, வாயில் நேரக் கருதிய தலைமகள், 'பரத்தையர்க்குப் பின்பும் அவன் சிறப்புச் செய்தான்' என்பது கேட்டு, பொறாளாய்க் கருத்து அழிந்து, தன்னுள்ளே சொல்லியது. 2

 


 
13
பரியுடை நல் மான் பொங்குஉளை அன்ன
அடைகரை வேழம் வெண் பூப் பகரும்,
தண் துறை ஊரன் பெண்டிர்,
துஞ்சு ஊர் யாமத்தும், துயில் அறியலரே.
வாயிலாய்ப் புக்கார்க்குத் தலைமகள், 'அவன் பெண்டிர் நள்ளென் யாமத்தும் துயிலார்; அவர் அறியாமல் அவன் வரும் திறம் யாது?' எனச் சொல்லி வாயில் மறுத்தது. 3

 
14
கொடிப் பூ வேழம் தீண்டி, அயல
வடிக்கொள் மாஅத்து வண் தளிர் நுடங்கும்
அணித் துறை ஊரன் மார்பே
பனித் துயில் செய்யும் இன் சாயற்றே.
தலைமகள் புணர்ச்சி வேட்கையைக் குறிப்பினான் உணர்ந்த தோழி, 'அவன் கொடுமை நினையாது அவன் மார்பை நினைந்து ஆற்றாயாகின்றது என்னை?' என்றாட்கு, அவன் கொடியனேஆயினும், அவன் மார்பு குளிர்ந்த துயிலைச் செய்யும் இனிய சாயலை உடைத்து ’ஆதலால் காண்’ எனச் சொல்லியது. 4

 
15
மணல் ஆடு மலிர்நிறை விரும்பிய, ஒண் தழை
புனல் ஆடு மகளிர்க்குப் புணர் துணை உதவும்
வேழ மூதூர் ஊரன்
ஊரன் ஆயினும், ஊரன் அல்லன்னே.
சேணிடைப் பிரிந்து வந்து உடன் உறைகின்ற தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாகின்றது என்று குறிப்பினான் உணர்ந்து, தலைமகள் வேறுபட்டாளாக, தோழி அதனை அறியாது, ' அவன் உடன்உறையவும் வேறுபடுகின்றது என்னை?' என்றட்கு அவள் சொல்லியது. 5

 
17
புதல் மிசை நுடங்கும் வேழ வெண் பூ
விசும்பு ஆடு குருகின் தோன்றும் ஊரன்
புதுவோர் மேவலன் ஆகலின்,
வறிது ஆகின்று, என் மடம் கெழு நெஞ்சே.
தலைமகன் பரத்தையிற் பிரிந்த வழி, 'இவ்வாறு ஒழுகுதலும் ஆடவர்க்கு இயல்பு அன்றே; நீ இதற்கு நெஞ்சு அழிகின்றது என்னை?' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 7

 
18
இருஞ் சாய் அன்ன செருந்தியொடு வேழம்
கரும்பின் அலமரும் கழனி ஊரன்,
பொருந்து மலர் அன்ன என் கண் அழ,
பிரிந்தனன் அல்லனோ, 'பிரியலென்' என்றே?
பரத்தையிற் பிரிந்து வந்து தெளித்துக் கூடிய தலைமகற்குப் பின் அவ் ஓழுக்கம் உளதாயவழி, அவன் வரவிடுத்த வாயில்கட்குத் தலைமகள் சொல்லியது. 8

 
19
எக்கர் மாஅத்துப் புதுப் பூம் பெருஞ் சினை,
புணர்ந்தோர் மெய்ம் மணம் கமழும் தண் பொழில்,
வேழ வெண் பூ வெள் உளை சீக்கும்
ஊரன் ஆகலின் கலங்கி,
5
மாரி மலரின் கண் பனி உகுமே.
'பல் நாள் அவன் சேணிடைப் பிரியவும் ஆற்றியுளையாகிய நீ சில் நாள் அவன் புறத்து ஒழுகுகின்ற இதற்கு ஆற்றாயாகின்றது என்னை?' என்ற தோழிக்கு, 'எதிர்ப்பாடு இன்றி ஓர் ஊர்க்கண்ணே உறைகையினாலே ஆற்றேனாகின்றேன்' எனத் தலைமகள் சொல்லியது. 9

 
20
அறு சில் கால அஞ்சிறைத் தும்பி
நூற்றிதழ்த் தாமரைப் பூச் சினை சீக்கும்,
காம்பு கண்டன்ன தூம்புடை, வேழத்துத்
துறை நணி ஊரனை உள்ளி, என்
5
இறை ஏர் எல் வளை நெகிழ்பு ஓடும்மே.
தலைமகளை வாயில் நேர்வித்தற் பொருட்டாக, 'காதலர் கொடுமை செய்தாராயினும், அவர் திறம் மறவாதொழியல் வேண்டும்' என்று முகம்புகுகின்ற தோழிக்கு, 'என் கைவளை நில்லாதாகின்றது அவரை நினைந்ததன் பயன் அன்றே; இனி அமையும்' எனத் தலைமகள் சொல்லியது. 10

 
22
அள்ளல் ஆடிய புள்ளிக் களவன்
முள்ளி வேர் அளைச் செல்லும் ஊரன்
நல்ல சொல்லி மணந்து, 'இனி
நீயேன்' என்றது எவன்கொல்? அன்னாய்!'
களவினில் புணர்ந்து. பின்பு வரைந்து கொண்டு ஒழுகாநின்றதலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்றாக, ஆற்றாளாகியதலைமகள் தோழிக்குச் சொல்லியது. 2

 
23
முள்ளி வேர் அளைக் களவன் ஆட்டி,
பூக் குற்று, எய்திய புனல் அணி ஊரன்
தேற்றம் செய்து நப்புணர்ந்து, இனித்
தாக்கு அணங்கு ஆவது எவன்கொல்? அன்னாய்!
இதுவும் அது. 3

 
31
அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
கடன் அன்று என்னும் கொல்லோ நம் ஊர்
முடம் முதிர் மருதத்துப் பெருந் துறை
உடன் ஆடு ஆயமோடு உற்ற சூளே?
முன் ஒரு நாள் தன்னோடு புதுப்புனல் ஆடுழி, 'இனிப் புறத்தொழுக்கம் விரும்பேன்' என ஆயத்தாரோடு சூளுற்ற தலைமகன் பின்பும் பரத்தையரோடு புனலாடத் தொடங்குகின்றான் என்பது கேட்ட தலைமகள், அவன் உழையர் கேட்ப, தோழிக்குச் சொல்லியது.

 
32
அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
ஒரு நாள் நம் இல் வந்ததற்கு, எழு நாள்
அழுப என்ப, அவன் பெண்டிர்
தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே.
வாயில் வேண்டிப் புகுந்தார் கேட்பத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 2

 
33
அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
மருது உயர்ந்து ஓங்கிய விரி பூம் பெருந் துறை,
பெண்டிரொடு ஆடும் என்ப தன்
தண் தார் அகலம் தலைத்தலைக் கொளவே.
இதுவும் அது. 3

 
34
அம்ம வாழி, தோழி! நம் ஊர்ப்
பொய்கைப் பூத்த, புழைக் கால் ஆம்பல்
தாது ஏர் வண்ணம் கொண்டன
ஏதிலாளர்க்குப் பசந்த என் கண்ணே.
இதுவும் அது. 4

 
35
அம்ம வாழி, தோழி! நம் ஊர்ப்
பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால்
நிறத்தினும் நிழற்றுதல் மன்னே;
இனிப் பசந்தன்று, என் மாமைக் கவினே.
வாயிலாய்ப் புகுந்தார் தலைமகன் குணம் கூறிய வழி, 'அவனுக்கு இல்லாதனவே கூறுதலால், இப்பொழுது காண் என் மேனி பசந்தது' எனத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 5

 
36
அம்ம வாழி, தோழி! ஊரன்
நம் மறந்து அமைகுவன் ஆயின், நாம் மறந்து
உள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னே
கயல் எனக் கருதிய உண் கண்
5
பசலைக்கு ஒல்காவாகுதல் பெறினே.
தான் வாயில் நேரும் குறிப்பினளானமை அறியாது, தோழி வாயில் மறுத்துழி, அவள் நேரும் வகையால் அவட்குத் தலைமகள் சொல்லியது. 6

 
41
'தன் பார்ப்புத் தின்னும் அன்பு இல் முதலையொடு
வெண் பூம் பொய்கைத்து, அவன் ஊர்' என்ப; அதனால்
தன் சொல் உணர்ந்தோர் மேனி
பொன் போல் செய்யும் ஊர்கிழவோனே.
கழறித் தெருட்டற் பாலராகிய அகம் புகல் மரபின் வாயில்கள் புகுந்துழி, தலைவனையும் பாணன் முதலாகிய பக்கத்தாரையும் இகழ்ந்து, தலைவி கூறியது. 1

 
42
மகிழ் மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ
யாணர் ஊர! நின் மாண் இழை அரிவை?
காவிரி மலிர்நிறை அன்ன நின்
மார்பு நனி விலக்கல் தொடங்கியோளே.
தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை, 'தலைவன் பிற பரத்தையருடன் ஒழுகினான்' என்று புலந்தாளாக, அதனை அறிந்த தலைவி, அவன் தன் இல்லத்துப் புகுந்துழி, தான் அறிந்தமை தோன்றச் சொல்லியது. 2

 
43
அம்பணத்து அன்ன யாமை ஏறி,
செம்பின் அன்ன பார்ப்புப் பல துஞ்சும்
யாணர் ஊர! நின்னினும்
பாணன் பொய்யன்; பல சூளினனே.
பாணன் வாயிலாகப் புகுந்து தெளிப்ப மறுத்த தலைமகள், பாணனோடு தலைவன் புகுந்து தெளித்துழிச் சொல்லியது. 3

 
47
முள் எயிற்றுப் பாண்மகள் இன் கெடிறு சொரிந்த
அகன் பெரு வட்டி நிறைய, மனையோள்
அரிகாற் பெரும் பயறு நிறைக்கும் ஊர!
மாண் இழை ஆயம் அறியும் நின்
5
பாணன் போலப் பல பொய்த்தல்லே.
பாணற்கு வாயில் மறுத்த தலைமகள் பின் அப் பாணனோடு தலைமகன் புகுந்து, தன் காதன்மை கூறியவழிச் சொல்லியது. 7

 
48
வலை வல் பாண்மகன் வால் எயிற்று மடமகள்
வராஅல் சொரிந்த வட்டியுள், மனையோள்
யாண்டு கழி வெண்ணெல் நிறைக்கும் ஊர!
வேண்டேம், பெரும! நின் பரத்தை
5
ஆண்டுச் செய் குறியொடு ஈண்டு நீ வரலே.
பரத்தையர்மாட்டு ஒழுகாநின்று தன் மனைக்கண்
சென்ற தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. 8

 
49
அம் சில் ஓதி அசைநடைப் பாண்மகள்
சில் மீன் சொரிந்து, பல் நெற்பெறூஉம்
யாணர் ஊர! நின் பாண்மகன்
யார் நலம் சிதையப் பொய்க்குமோ, இனியே?
பாணன் வாயிலாகப் பரத்தையோடு கூடினான் என்பது கேட்ட தலைமகள் தனக்கும் பாணனால் காதன்மை கூறுவிப்பான் புக்க தலைமகற்குச் சொல்லியது. 9

 
61
நறு வடி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்
நெடு நீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம்,
கை வண் மத்தி, கழாஅர் அன்ன
நல்லோர் நல்லோர் நாடி,
5
வதுவை அயர விரும்புதி நீயே.
'வதுவை அயர்ந்தாள் ஒரு பரத்தையைச் சில் நாளில் விட்டு, மற்றொரு பரத்தையை வதுவை அயர்ந்தான்' என்பது அறிந்த தலைமகள் அவன் மனைவயின் புக்குழிப் புலந்தாளாக,'இது மறைத்தற்கு அரிது' என உடன்பட்டு, 'இனி என்னிடத்து இவ்வாறு நிகழாது'

 
62
இந்திர விழவில் பூவின் அன்ன
புன் தலைப் பேடை வரி நிழல் அகவும்
இவ் ஊர் மங்கையர்த் தொகுத்து, இனி
எவ் ஊர் நின்றன்று மகிழ்ந! நின் தேரே?
இதுவும் அது. 2

 
63
பொய்கைப் பள்ளிப் புலவு நாறு நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊர!
எம் நலம் தொலைவது ஆயினும்
துன்னலம் பெரும! பிறர்த் தோய்ந்த மார்பே.
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து கூறியது. 3

 
64
அலமரல் ஆயமொடு அமர்துணை தழீஇ
நலம் மிகு புதுப் புனல் ஆட, கண்டோர்
ஒருவரும் இருவரும் அல்லர்;
பலரே தெய்ய; எம் மறையாதீமே.
தலைமகன் பரத்தையரோடு புனலாடினான் என்பது அறிந்த தலைமகள் அவன் மறைத்துழிச் சொல்லியது. 4

 
65
கரும்பு நடு பாத்தியில் கலித்த ஆம்பல்
சுரும்பு பசி களையும் பெரும் புனல் ஊர!
புதல்வனை ஈன்ற எம் மேனி
முயங்கன்மோ தெய்ய; நின் மார்பு சிதைப்பதுவே.
ஆற்றாமையே வாயிலாகப் புக்க தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. 5

 
66
உடலினென் அல்லேன்; பொய்யாது  மோ:
யார் அவள், மகிழ்ந! தானே தேரொடு,
தளர் நடைப் புதல்வனை உள்ளி, நின்
வள மனை வருதலும் வௌவியோளே?
புதல்வனைப் பிரியாதவன் பிரிந்து, புறத்துத் தங்கி, வந்தானாக, அவனோடு புலந்து தலைமகள் சொல்லியது. 6

 
67
மடவள் அம்ம, நீ இனிக் கொண்டோளே
'தன்னொடு நிகரா என்னொடு நிகரிப்
பெரு நலம் தருக்கும்' என்ப: விரிமலர்த்
தாது உண் வண்டினும் பலரே,
5
ஓதி ஒள் நுதல் பசப்பித்தோரே.
தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை புறன்  த்தாள் எனக் கேட்ட தலைவி தலைமகன் வந்துழி, அவள் திறத்தாராய் நின்று ஒழுகும் வாயில்கள் கேட்பச் சொல்லியது. 7

 
68
கன்னி விடியல், கணைக் கால் ஆம்பல்
தாமரை போல மலரும் ஊர!
பேணாளோ நின் பெண்டே
யான் தன் அடக்கவும், தான் அடங்கலளே?
பரத்தை தான் தலைமகளைப் புறங்கூறி வைத்து, தன்னைத் தலைமகள் புறங்கூறினாளாகப் பிறர்க்குக் கூறினமை கேட்ட தலைவி தலைமகற்குச் சொல்லியது. 8

 
69
கண்டனெம் அல்லமோ, மகிழ்ந! நின் பெண்டே?
பலர் ஆடு பெருந் துறை, மலரொடு வந்த
தண் புனல் வண்டல் உய்த்தென,
உண்கண் சிவப்ப, அழுது நின்றோளே!
தலைமகன் பெதும்பைப் பருவத்தாள் ஒரு பரத்தையைக் களவில் மணந்து ஒழுகுகின்றதனை அறிந்த தலைமகள், 'தனக்கு இல்லை' என்று அவன் மறைத்துழிச் சொல்லியது. 9

 
70
பழனப் பல் மீன் அருந்த நாரை
கழனி மருதின் சென்னிச் சேக்கும்
மா நீர்ப் பொய்கை யாணர் ஊர!
தூயர்; நறியர் நின் பெண்டிர்:
5
பேஎய் அனையம், யாம்; சேய் பயந்தனமே.
பரத்தையரோடு பொழுது போக்கி நெடிது துய்த்து வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து சொல்லியது. 10

 
71
சூது ஆர் குறுந் தொடிச் சூர் அமை நுடக்கத்து
நின் வெங் காதலி தழீஇ, நெருநை
ஆடினை என்ப, புனலே; அலரே
மறைத்தல் ஒல்லுமோ, மகிழ்ந?
5
புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே?
பரத்தையரோடு புனலாடினான் எனக் கேட்டுப் புலந்த தலைமகள் தலைமகன் அதனை இல்லை என்று மறைத்துழிச் சொல்லியது. 1

 
80
புலக்குவெம் அல்லேம்; பொய்யாது  மோ:
நலத்தகு மகளிர்க்குத் தோள் துணை ஆகி,
தலைப் பெயல் செம் புனல் ஆடித்
தவ நனி சிவந்தன, மகிழ்ந! நின் கண்ணே.
தன்னை ஒழியப் புதுப்புனலாடித் தாழ்த்து வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து சொல்லியது. 10

 
82
வெகுண்டனள் என்ப, பாண! நின் தலைமகள்
'மகிழ்நன் மார்பின் அவிழ் இணர் நறுந் தார்த்
தாது உண் பறவை வந்து, எம்
போது ஆர் கூந்தல் இருந்தன' எனவே.
மனைவயிற் புகுந்த பாணற்குத் தலைமகன் கேட்குமாற்றால் தலைமகள் சொல்லியது. 2

 
83
மணந்தனை அருளாய் ஆயினும், பைபயத்
தணந்தனை ஆகி, உய்ம்மோ நும் ஊர்
ஒண் தொடி முன் கை ஆயமும்
தண் துறை ஊரன் பெண்டு எனப்படற்கே.
வரைந்த அணுமைக்கண்ணே தலைமகற்குப் புறத்தொழுக்கம் உண்டாகிய வழி, அதனை அறிந்த தலைவி அவனோடு புலந்து சொல்லியது. 3

 
85
வெண் நுதல் கம்புள் அரிக் குரல் பேடை
தண் நறும் பழனத்துக் கிளையோடு ஆலும்
மறு இல் யாணர் மலி கேழ் ஊர! நீ
சிறுவரின் இனைய செய்தி;
5
நகாரோ பெரும! நிற் கண்டிசினோரே?
தலைமகன் பரத்தையர்மேல் காதல் கூர்ந்து நெடித்துச் செல்வுழி, மனையகம் புகுந்தானாகத் தலைவி கூறியது. 5

 
95
கருங் கோட்டு எருமை கயிறு பரிந்து அசைஇ,
நெடுங் கதிர் நெல்லின் நாள் மேயல் ஆரும்
புனல் முற்று ஊரன், பகலும்,
படர் மலி அரு நோய் செய்தனன், எமக்கே.
உண்டிக்காலத்து மனைக்கண் வருதலும் சுருங்கி, பரத்தையிடத்தனாய்த் தலைமகன் ஒழுகியவழி, அவற்கு வாயிலாய் வந்தார்க்குத் தலைமகள் சொல்லியது. 5

 
111
அம்ம வாழி, தோழி! பாணன்
சூழ் கழிமருங்கின் நாண் இரை கொளீஇச்
சினைக் கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை
பிரிந்தும் வாழ்துமோ நாமே
5
அருந் தவம் முயறல் ஆற்றாதேமே?
'இற்செறிப்பார்' எனக் கேட்ட தலைமகள் வரையாது வந்து ஒழுகும் தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியது. 1

 
112
அம்ம வாழி, தோழி! பாசிலைச்
செருந்தி தாய இருங் கழிச் சேர்ப்பன்
தான் வரக் காண்குவம் நாமே;
மறந்தோம் மன்ற, நாணுடை நெஞ்சே.
களவு நீடுவழி, 'வரையலன்கொல்?' என்று அஞ்சிய தோழிக்குத் தலைமகன் வரையும் திறம் தெளிக்க, தெளிந்த தலைமகள் சொல்லியது. 2

 
113
அம்ம வாழி, தோழி! நென்னல்
ஓங்குதிரை வெண் மணல் உடைக்கும் துறைவற்கு,
ஊரார், 'பெண்டு' என மொழிய, என்னை,
அது கேட்டு, 'அன்னாய்' என்றனள், அன்னை;
5
பைபய 'எம்மை' என்றனென், யானே.
வரையாது வந்து ஒழுகும் தலைமகன் சிறைப்புறத்து நின்று கேட்ப, 'நெருநல் இல்லத்து நிகழ்ந்தது இது' எனத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 3

 
114
அம்ம வாழி, தோழி! கொண்கன்
நேரேம் ஆயினும், செல்குவம் கொல்லோ
கடலின் நாரை இரற்றும்
மடல்அம் பெண்ணை அவனுடை நாட்டே?
இடைவிட்டு ஒழுகும் தலைமகன் வந்து சிறைப்புறத்தான் ஆனமை அறிந்த தலைமகள் அவன் கேட்குமாற்றால் தோழிக்குச் சொல்லியது. 4

 
115
அம்ம வாழி, தோழி! பல் மாண்
நுண் மணல் அடைகரை நம்மோடு ஆடிய
தண்ணம் துறைவன் மறைஇ,
அன்னை அருங் கடி வந்து நின்றோனே!
இற் செறிப்புண்ட பின்பும், வரைந்து கொள்ள நினையாது தலைமகன் வந்தானாக, அதனை அறிந்த தலைமகள் அவன் கேட்குமாற்றால் தோழிக்குச் சொல்லியது. 5

 
116
அம்ம வாழி, தோழி! நாம் அழ,
நீல இருங் கழி நீலம் கூம்பும்
மாலை வந்தன்று, மன்ற
காலை அன்ன காலை முந்துறுத்தே.
எற்பாட்டின்கண் தலைமகன் சிறைப்புறத்து நின்று கேட்ப, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 6

 
117
அம்ம வாழி, தோழி! நலனே
இன்னது ஆகுதல் கொடிதே! புன்னை
அணி மலர் துறைதொறும் வரிக்கும்
மணி நீர்ச் சேர்ப்பனை மறவாதோர்க்கே.
வரையாது வந்து ஒழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 7

 
118
அம்ம வாழி, தோழி! யான் இன்று,
அறனிலாளற் கண்ட பொழுதில்,
சினவுவென் தகைக்குவென் சென்றனென்
பின் நினைந்து இரங்கிப் பெயர்தந்தேனே.
சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி வாயில் மறுத்த தலைமகள், பின்பு தலைமகன் வந்துழி, நிகழ்ந்ததனை அவட்குக் கூறியதூஉம் ஆம். 8

 
119
அம்ம வாழி, தோழி! நன்றும்
எய்யாமையின் ஏதில பற்றி,
அன்பு இலன் மன்ற பெரிதே
மென் புலக் கொண்கன் வாராதோனே!
'வரைதற்கு வேண்டுவன முயல்வேம்' எனச் சொல்லி வரையாது செலுத்துகின்ற தலைமகன் சிறைப்புறத்தான் ஆனமை அறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 9

 
120
அம்ம வாழி, தோழி! நலம் மிக
நல்லஆயின, அளிய மென் தோளே
மல்லல் இருங் கழி மல்கும்
மெல்லம் புலம்பன் வந்தமாறே.
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்து சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 10

 
131
நன்றே, பாண! கொண்கனது நட்பே
தில்லை வேலி இவ் ஊர்க்
கல்லென் கௌவை எழாஅக்காலே.
வாயில் வேண்டி வந்த பாணன் தலைமகன் காதன்மை கூறினானாக, தலைமகள் வாயில் மறுப்பாள் அவற்குக் கூறியது. 1

 
132
அம்ம வாழி, பாண! புன்னை
அரும்பு மலி கானல் இவ் ஊர்
அலர் ஆகின்று, அவர் அருளுமாறே.
வாயில் வேண்டி வந்த பாணன், 'நீர் கொடுமை கூற வேண்டா; நும்மேல் அருள் உடையர்' என்றாற்குத் தலைமகள் சொல்லியது. 2

 
133
யான் எவன் செய்கோ? பாண! ஆனாது
மெல்லம் புலம்பன் பிரிந்தென,
புல்லென்றன, என் புரி வளைத் தோளே!
வாயிலாய்ப் புகுந்த பாணன் தலைமகள் தோள் மெலிவு கண்டு, 'மனைப்புறத்துப் போய் வந்த துணையானே இவ்வாறு வேறுபடுதல் தகாது' என்றாற்கு அவள் சொல்லியது. 3

 
134
காண்மதி, பாண! இருங் கழிப்...
பாய்பரி நெடுந் தேர்க் கொண்கனொடு
தான் வந்தன்று, என் மாமைக் கவினே.
பிரிவின்கண் தலைமகள் கவின் தொலைவு கண்டு வெறுத்து ஒழுகுகின்ற பாணற்குத் தலைமகன் வந்துழிக் கவின் எய்திய தலைமகள் சொல்லியது. 4

 
135
பைதலம் அல்லேம், பாண! பணைத் தோள்,
ஐது அமைந்து அகன்ற அல்குல்,
நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே.
பரத்தை ஒருத்தியைத் தலைப்பெய்வான் வேண்டி அதனைத் தலைமகன் மறைத்து ஒழுகுகின்றது அறிந்த தலைமகள் அவன் கேட்குமாற்றால் பாணற்குச் சொல்லியது. 5

 
136
நாண் இலை மன்ற, பாண! நீயே
கோள் நேர் இலங்கு வளை நெகிழ்த்த
கானல் அம் துறைவற்குச் சொல் உகுப்போயே!
வாயிலாய்ப் புகுந்து தலைமகன் குணம் கூறிய பாணற்கு வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது. 6

 
137
நின் ஒன்று வினவுவல், பாண! நும் ஊர்த்
திண் தேர்க் கொண்கனை நயந்தோர்
பண்டைத் தம் நலம் பெறுபவோ மற்றே?
தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்து நீங்கின இடத்தும், அவன் முன்பு செய்த தீங்கு நினைந்து தலைமகள் வேறுபட்டிருந்தாளாக, இனி ' இந்த வேறுபாடு என்?' என்று வினவிய பாணற்கு அவள் சொல்லியது 7

 
138
பண்பு இலை மன்ற, பாண! இவ் ஊர்
அன்பு இல கடிய கழறி,
மென் புலக் கொண்கனைத் தாராதோயே!
தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்தது அறியாது வந்த பாணற்குத் தலைமகள் நகையாடிச் சொல்லியது. 8

 
139
அம்ம வாழி, கொண்க! எம் வயின்
மாண் நலம் மருட்டும் நின்னினும்,
பாணன் நல்லோர் நலம் சிதைக்கும்மே.
ஆற்றாமை வாயிலாகப் புகுந்திருந்த தலைமகற்குப் பாணன் வந்துழித் தலைமகள் சொல்லியது. 9

 
140
காண்மதி, பாண! நீ  த்தற்கு உரியை
துறை கெழு கொண்கன் பிரிந்தென,
இறை கேழ் எல் வளை நீங்கிய நிலையே.
பாணன் தூதாகிச் செல்ல வேண்டும் குறிப்பினளாகிய தலைமகள் அவற்குத் தன் மெலிவு காட்டிச் சொல்லியது. 10

 
141
எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்
துவலைத் தண் துளி வீசிப்
பசலை செய்தன பனி படு துறையே.
வரைவிடை வைத்துப் பிரிந்துழி ஆற்றாளாகின்ற தலைமகள், 'அவன் வரைதற்குப் பிரியவும், நீ ஆற்றாய் ஆகின்றது என்னை?' என்ற தோழிக்குச் சொல்லியது. 1

 
142
எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப் படு சினைப்
புள் இறை கூரும் துறைவனை
உள்ளேன் தோழி! படீஇயர் என் கண்ணே!
வரையாது வந்தொழுகும் தலைமகன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாக, 'நின் கண் துயி றற் பொருட்டு நீ அவனை மறக்க வேண்டும்' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 2

 
144
எக்கர் ஞாழல் இணர் படு பொதும்பர்த்
தனிக் குருகு உறங்கும் துறைவற்கு
இனிப் பசந்தன்று என் மாமைக் கவினே.
'தலைமகன் வரைந்து கோடல் நினையாது, களவொழுக்கமே விரும்பி ஒழுகாநின்றான்' என்பது அறிந்து வேறுபட்ட தலைமகள், 'அவன் கூறியவற்றால் இனிக் கடிதின் வரைவன்; ஆற்றாயாகாது ஒழியவேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது. 4

 
146
எக்கர் ஞாழல் அரும்பு முதிர் அவிழ் இணர்
நறிய கமழும் துறைவற்கு
இனியமன்ற என் மாமைக் கவினே.
வரைவு கடாவவும் வரையாது ஒழுகுகின்றுழி, நம்மை எவ்வகை நினைத்தார் கொல்லோ?' என்று ஐயுற்றிருந்த தலைமகள் வரைவு தலைவந்துழித் தோழிக்குச் சொல்லியது. 6

 
150
எக்கர் ஞாழல் நறு மலர்ப் பெருஞ் சினைப்
புணரி திளைக்கும் துறைவன்
புணர்வின் இன்னான்; அரும் புணர்வினனே.
முன் ஒருகால் பிரிந்து வந்த தலைமகன் பின்னும் பிரிந்து வந்துழி அவனை முயங்காளாக, தோழி, 'நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?' என்று வினவியவழி, தலைமகள் தோழிக்குத் தலைமகன் கேட்பச் சொல்லியது. 10

 
151
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
மிதிப்ப, நக்க கண் போல் நெய்தல்
கள் கமழ்ந்து ஆனாத் துறைவற்கு
5
நெக்க நெஞ்சம் நேர்கல்லேனே.
வாயில் வேண்டிய தோழிக்கு தலைமகள் வாயில் மறுப்பாள் சொல்லியது. 1

 
152
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
கையறுபு இரற்று கானல்அம் புலம்பந்
துறைவன் வரையும் என்ப;
5
அறவன் போலும்; அருளுமார் அதுவே.
தலைமகள் வாயில் மறுத்துழி, 'இவன் நின்மேல் தொடர்ச்சியில் குறைவிலன்; அருளும் உடையான்; ஆதலால் நீ இவனோடு புலத்தல் தகாது' என நெருங்கி, வாயில் நேர்விக்கும் தோழிக்கு அவள் சொல்லியது. 2

 
154
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
கானல் சேக்கும் துறைவனோடு
யான் எவன் செய்கோ? பொய்க்கும் இவ் ஊரே?
தோழி வாயில் வேண்டி நெருங்கியவழி, வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது. 4

 
155
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
பதைப்ப, ததைந்த நெய்தல் கழிய
ஓதமொடு பெயரும் துறைவற்குப்
5
பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென், யானே!
பல வழியானும் வாயில் நேராளாகிய தலைமகள், 'மகப் பேற்றிற்கு உரித்தாகிய காலம் கழிய ஒழுகுகின்றாய்' என நெருங்கிய தோழிக்குச் சொல்லியது. 5

 
157
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
காலை இருந்து மாலைச் சேக்கும்
தெண் கடற் சேர்ப்பனொடு வாரான்,
5
தான் வந்தனன், எம் காதலோனே!
பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டி ஒழுகுகின்ற தலைமகன், 'புதல்வன் வாயிலாக வரும்' எனக் கேட்டு, அஞ்சிய தலைமகள் புதல்வன் விளையாடித் தனித்து வந்துழிச் சொல்லியது. 7

 
160
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
நொந்ததன் தலையும் நோய் மிகும் துறைவ!
பண்டையின் மிகப் பெரிது இனைஇ,
5
முயங்குமதி, பெரும! மயங்கினள் பெரிதே!
புலந்த காதல் பரத்தை புலவி தீராது தலைமகன் வாயில் வேண்டி வந்தான் என்றது அறிந்த தலைமகள் வாயில் மறுத்தது. 10

 
161
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
கருங் கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப்
பயந்து நுதல் அழியச் சாஅய்,
நயந்த நெஞ்சம் நோய்ப்பாலஃதே!
ஒருவழித் தணந்துழி ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் ஆற்றாளாய்ச் சொல்லியது. 1

 
162
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
நீத்து நீர் இருங் கழி இரை தேர்ந்து உண்டு,
பூக் கமழ் பொதும்பர்ச் சேக்கும்
துறைவன் சொல்லோ பிற ஆயினவே!
இதுவும் அது. 2

 
163
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
இருங் கழித் துவலை ஒலியின் துஞ்சும்
துறைவன் துறந்தென, துறந்து என்
இறை ஏர் முன்கை நீங்கிய, வளையே.
இதுவும் அது. 3

 
164
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
இருங் கழி மருங்கின் அயிரை ஆரும்
தண்ணம் துறைவன் தகுதி
நம்மோடு அமையாது, அலர் பயந்தன்றே!
தலைமகனுக்குப் புறத்தொழுக்கம் உளதாகியவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 4

 
165
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
அறு கழிச் சிறு மீன் ஆர மாந்தும்
துறைவன் சொல்லிய சொல் என்
இறை ஏர் எல் வளை கொண்டு நின்றதுவே!
இதுவும் அது. 5

 
167
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
இருங் கழி இனக் கெடிறு ஆரும் துறைவன்
நல்குவன் போலக் கூறி,
நல்கான் ஆயினும், தொல் கேளன்னே.
பரத்தையிற் பிரிந்த தலைமகன் விட, வாயிலாய் வந்தார்க்கு அவன் கொடுமை கூறித் தோழி இயற்பழித்தவழித் தலைமகள் சொல்லியது. 7

 
169
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
ஒள் இணர் ஞாழல் முனையின், பொதி அவிழ்
புன்னைஅம் பூஞ் சினைச் சேக்கும் துறைவன்
நெஞ்சத்து உண்மை அறிந்தும்,
5
என் செயப் பசக்கும் தோழி! என் கண்ணே?
காதல் பரத்தையை விட்டு மற்றொருத்தியுடன் ஒழுகாநின்ற தலைமகன் வாயில் வேண்டி விடுத்துழி, வாயில் நேர்தல் வேண்டி, 'நின் கண் பசந்தனகாண்' என்று முகம்புகு தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 9

 
170
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
இருங் கழி நெய்தல் சிதைக்கும் துறைவன்
'நல்லன்' என்றிஆயின்;
பல் இதழ் உண்கண் பசத்தல் மற்று எவனோ?
தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாகிய வழி வேறுபட்ட தலைமகள், 'அவற்கு அவ்வாறு நிகழ்ச்சி இல்லை; நம்மேல் அன்புடையன்' என்று தெளிக்கும் தோழிக்குச் சொல்லியது. 10

 
192
கோடு புலம் கொட்ப, கடல் எழுந்து முழங்க,
பாடு இமிழ் பனித் துறை ஓடு கலம் உகைக்கும்
துறைவன் பிரிந்தென, நெகிழ்ந்தன,
வீங்கின மாதோ தோழி! என் வளையே!
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்துழித் தலைவி முனிந்து கூறுவாள்போலத் தன் மெலிவு நீங்கினமை தோழிக்குத் சொல்லியது. 2

 
201
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! என்னை
தானும் மலைந்தான்; எமக்கும் தழை ஆயின;
பொன் வீ மணி அரும்பினவே
என்ன மரம்கொல், அவர் சாரலவ்வே!
நொதுமலர் வரைவின்கண் செவிலி கேட்குமாற்றால் தலைமகள் தோழிக்கு அறத்தொடுநிலை குறித்து  த்தது. 1
 

 
203
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைத்
தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு
உவலைக் கூவல் கீழ
மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே.
உடன்போய் மீண்ட தலைமகள், 'நீ சென்ற நாட்டு நீர் இனிய அல்ல; நீ எங்ஙனம் நுகர்ந்தாய்?' எனக் கேட்ட தோழிக்குக் கூறியது. 3
 

 
204
அன்னாய், வாழி, வேண்டு, அன்னை! அஃது எவன்கொல்?
வரையர மகளிரின் நிரையுடன் குழீஇ,
பெயர்வுழிப் பெயர்வுழித் தவிராது நோக்கி,
நல்லள் நல்லள் என்ப;
5
தீயேன் தில்ல, மலை கிழவோற்கே!
வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 4
 

 
209
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நீ மற்று
யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின்,
கொண்டல் அவரைப் பூவின் அன்ன
வெண் தலை மா மழை சூடி,
5
தோன்றல் ஆனாது, அவர் மணி நெடுங் குன்றே.
வரைவிடை வைத்துப்பிரிவின்கண் அவனை நினைவு விடாது ஆற்றாளாகியவழி, 'சிறிது மறந்து ஆற்ற வேண்டும்' என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 9
 

 
213
நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்ந்த
ஈர்ந் தண் பெரு வடு, பாலையில், குறவர்,
உறை வீழ் ஆலியின், தொகுக்கும் சாரல்
மீமிசை நல் நாட்டவர் வரின்,
5
யான் உயிர் வாழ்தல் கூடும் அன்னாய்!
வரைவொடு வருதலைத் துணிந்தான் என்பது தோழி கூறக் கேட்ட தலைமகள் சொல்லியது. 3
 

 
215
கட்டளை அன்ன மணி நிறத் தும்பி,
இட்டிய குயின்ற துளைவயின் செலீஇயர்,
தட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர்
தீம் குழல் ஆம்பலின், இனிய இமிரும்
5
புதல் மலர் மாலையும் பிரிவோர்
அதனினும் கொடிய செய்குவர் அன்னாய்!
இரவுக்குறி நயந்த தலைமகள், பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லியது. 5
 

 
221
அம்ம வாழி, தோழி! காதலர்
பாவை அன்ன என் ஆய்கவின் தொலைய,
நல் மா மேனி பசப்ப,
செல்வல்' என்ப தம் மலை கெழு நாட்டே.
'ஒருவழித் தணந்து வரைதற்கு வேண்டுவன முடித்து வருவல்' என்று தலைமகன் கூறக்கேட்ட தலைமகள் அவன் சிறைப்புறத்தானாய்க் கேட்ப, தோழிக்குச்சொல்லியது. 1
 

 
222
அம்ம வாழி, தோழி! நம் ஊர்
நளிந்து வந்து உறையும் நறுந் தண் மார்பன்
இன்னினி வாராமாறுகொல்
சில் நிரை ஓதி! என் நுதல் பசப்பதுவே?
குறி இரண்டன்கண்ணும் வந்தொழுகும் தலைமகன் இடையிட்டு வந்து, சிறைப்புறத்து நின்றுழி, 'நின் நுதல் பசத்தற்குக் காரணம் என்னை?' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 2
 

 
224
அம்ம வாழி, தோழி! நம் மலை
மணி நிறம் கொண்ட மா மலை வெற்பில்
துணி நீர் அருவி நம்மோடு ஆடல்
எளிய மன்னால், அவர்க்கு; இனி,
5
அரிய ஆகுதல் மருண்டனென், யானே,
இற்செறிப்பு உணர்ந்த தலைமகள் ஆற்றாளாய், தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியது. 4
 

 
253
குன்றக் குறவன் சாந்த நறும் புகை
தேம் கமழ் சிலம்பின் வரையகம் கமழும்
கானக நாடன் வரையின்,
மன்றலும் உடையள்கொல் தோழி! யாயே?
'வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வரைவொடு புகுதராநின்றான்' என்பது தோழி கூறக் கேட்ட தலைமகன் அவட்குச் சொல்லியது. 3
 

 
262
சிறு தினை மேய்ந்த தறுகண் பன்றி
துறுகல் அடுக்கத்துத் துணையொடு வதியும்
இலங்குமலை நாடன் வரூஉம்;
மருந்தும் அறியும்கொல் தோழி! அவன் விருப்பே?
'வரைந்து கொள்ள நினைக்கிலன்' என்று வேறுபட்ட தலைமகள், 'அவன் நின்மேல் விருப்பமுடையன்; நீ நோகின்றது என்னை?' என்ற தோழிக்குச் சொல்லியது. 2
 

 
263
நன் பொன் அன்ன புனிறு தீர் ஏனல்
கட்டளை அன்ன கேழல் மாந்தும்
குன்று கெழு நாடன் தானும்
வந்தனன்; வந்தன்று தோழி! என் நலனே!
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன், மீண்டமை அறிந்த தலைமகள், 'நீ தொலைந்த நலம் இன்று எய்திய காரணம் என்னை?' என்ற தோழிக்குச் சொல்லியது. 3
 

 
265
புலி கொல் பெண்பால் பூ வரிக் குருளை
வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும்
குன்று கெழு நாடன் மறந்தனன்
பொன்போல் புதல்வனோடு என் நீத்தோனே.
பரத்தை இடத்தானாக ஒழுகுகின்ற தலைமகன் விடுத்த வாயில்மாக்கட்குத் தலைமகள் சொல்லியது. 5
 

 
272
கரு விரல் மந்திக் கல்லா வன் பறழ்
அரு வரைத் தீம் தேன் எடுப்பி, அயலது
உரு கெழு நெடுஞ் சினைப் பாயும் நாடன்
இரவின் வருதல் அறியான்;
5
'வரும் வரும்' என்ப தோழி! யாயே.
அல்லகுறிப்பட்டு நீங்கும் தலைமகன் சிறைப்புறத்தானாக, முன்னை நாள் நிகழ்ந்ததனைத் தோழிக்குச் சொல்லுவாள் போன்று, தலைமகள் சொல்லியது. 2
 

 
274
மந்திக் கணவன் கல்லாக் கடுவன்,
ஒண் கேழ் வயப்புலி குழுமலின், விரைந்து, உடன்
குன்று உயர் அடுக்கம் கொள்ளும் நாடன்
சென்றனன் வாழி, தோழி! என்
5
மென் தோள் கவினும், பாயலும், கொண்டே.
வரைவிடை வைத்துப் பிரிந்துழி, ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 4
 

 
278
சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல்
குரங்கின் வன் பறழ் பாய்ந்தென, இலஞ்சி
மீன் எறி தூண்டிலின் நிவக்கும் நாடன்
உற்றோர் மறவா நோய் தந்து,
5
கண்டோர் தண்டா நலம் கொண்டனனே!
வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 8
 

 
286
சிறு தினை கொய்த இருவி வெண் கால்
காய்த்த அவரைப் படு கிளி கடியும்
யாணர் ஆகிய நல் மலை நாடன்
புகர் இன்று நயந்தனன் போலும்;
5
கவரும் தோழி! என் மாமைக் கவினே.
உடன்போக்குத் துணிந்த தலைமகன் அஃது ஒழிந்து, தானே வரைவிடை வைத்துப் பிரிய நினைந்ததனைக் குறிப்பினான் உணர்ந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தலைமகன், 'வரைவிடை வைத்துப் பிரிவல்' என்றவழித் தலைமகள் தோழிக்குச் சொல்ல
 

 
292
மயில்கள் ஆல, பெருந் தேன் இமிர,
தண் மழை தழீஇய மா மலை நாட!
நின்னினும் சிறந்தனள், எமக்கே நீ நயந்து
நல் மனை அருங் கடி அயர,
5
எம் நலம் சிறப்ப, யாம் இனிப் பெற்றோளே.
பின்முறை ஆக்கிய பெரும் பொருள் வதுவை முடித்தவளை இல்லத்துக் கொண்டு புகுந்துழி, தலைமகள் உவந்து சொல்லியது. 2
 

 
295
வருவதுகொல்லோ தானே வாராது
அவண் உறை மேவலின், அமைவது கொல்லோ
புனவர் கொள்ளியின் புகல் வரும் மஞ்ஞை,
இருவி இருந்த குருவி வருந்துற,
5
பந்து ஆடு மகளிரின் படர்தரும்
குன்று கெழு நாடனொடு சென்ற என் நெஞ்சே?
தலைமகன் வரைவிடை வைத்துப் பிரிந்து நீட்டித்துழி, உடன்சென்ற நெஞ்சினைத் தலைமகள் நினைந்து கூறியது. 5
 

 
311
வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்,
ஆர் இடைச் செல்வோர் ஆறு நனி வெரூஉம்
காடு இறந்தனரே காதலர்;
'நீடுவர்கொல்' என நினையும், என் நெஞ்சே!
'ஆற்றது அருமை நினைந்து, நீ ஆற்றாயாதல் வேண்ட; அவர் அவ்வழி முடியச் சென்றார்' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 1
 

 
312
அறம் சாலியரோ! அறம் சாலியரோ!
வறன் உண்டாயினும், அறம் சாலியரோ!
வாள் வனப்பு உற்ற அருவிக்
கோள் வல் என்னையை மறைத்த குன்றே.
உடன்போயின தலைமகள் மீண்டு வந்துழி, 'நின் ஐயன்மார் பின் துரந்து வந்த இடத்து நிகழ்ந்தது என்னை?' என்ற தோழிக்கு நிகழ்ந்தது கூறி, தலைமகன் மறைதற்கு உதவி செய்த மலையை வாழ்த்தியது. 2
 

 
314
'அவிர் தொடி கொட்ப, கழுது புகவு அயர,
கருங் கண் காக்கையொடு கழுகு விசும்பு அகவ,
சிறு கண் யானை ஆள் வீழ்த்துத் திரிதரும்
நீள் இடை அருஞ் சுரம்' என்ப நம்
5
தோள் இடை முனிநர் சென்ற ஆறே.
தலைமகன் பிரிந்துழி, அவனுடன் போய் மீண்டார் வழியது அருமை தங்களில் கூறக் கேட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 4
 

 
317
சூழ்கம் வம்மோ தோழி! பாழ்பட்டுப்
பைது அற வெந்த பாலை வெங் காட்டு
அருஞ் சுரம் இறந்தோர் தேஎத்துச்
சென்ற நெஞ்சம் நீடிய பொருளே!
தலைமகன் பிரிந்து நீட்டித்துழி, நெஞ்சினைத் தூது விட்ட தலைமகள், அது வாராது தாழ்த்துழி, தோழிக்குச் சொல்லியது. 7
 

 
318
ஆய் நலம் பசப்ப, அரும் படர் நலிய,
வேய் மருள் பணைத் தோள் வில் இழை நெகிழ,
நசை நனி கொன்றோர் மன்ற விசை நிமிர்ந்து
ஓடு எரி நடந்த வைப்பின்,
5
கோடு உயர் பிறங்கல், மலை இறந்தோரே.
'நம்மைப் பிரியார்' என்று கருதியிருந்த தலைமகள், அவன் பிரிந்துழி, இரங்கிச் சொல்லியது. 8
 

 
319
கண் பொர விளங்கிய கதிர் தெறு வைப்பின்,
மண் புரை பெருகிய மரம் முளி கானம்
இறந்தனரோ நம் காதலர்?
மறந்தனரோதில் மறவா நம்மே?
தலைமகன் பிரிந்துழி, அவன் உணர்த்தாது பிரிந்தமை கூறிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 9
 

 
320
முள் அரை இலவத்து ஒள் இணர் வான் பூ,
முழங்குஅழல் அசைவளி எடுப்ப, வானத்து
உருமுப் படு கனலின் இரு நிலத்து உறைக்கும்
கவலை அருஞ் சுரம் போயினர்
5
தவல் இல் அரு நோய் தலைத்தந்தோரே.
தலைமகன் பிரிந்துழிச் சுரத்து வெம்மை நினைந்து, தலைமகள் சொல்லியது. 10
 

 
332
அம்ம வாழி, தோழி! என்னதூஉம்
அறன் இல மன்ற தாமே விறல் மிசைக்
குன்று கெழு கானத்த பண்பு இல் மாக் கணம்,
'கொடிதே காதலிப் பிரிதல்;
5
செல்லல், ஐய! என்னாதவ்வே.
பிரிந்த தலைமகன், 'சுரத்திடைக் கழியச் சென்றான்' என்பது கேட்ட தலைமகள் அங்குள்ள மாக்களை நொந்து, தோழிக்குச் சொல்லியது. 2
 

 
333
அம்ம வாழி, தோழி! யாவதும்
வல்லா கொல்லோ தாமே அவண
கல்லுடை நல் நாட்டுப் புள்ளினப் பெருந் தோடு,
'யாஅம் துணை புணர்ந்து உறைதும்;
5
யாங்குப் பிரிந்து உறைதி!' என்னாதவ்வே?
புட்களை நொந்து சொல்லியது. 3
 

 
334
அம்ம வாழி, தோழி! சிறியிலை
நெல்லி நீடிய கல் காய் கடத்திடை,
பேதை நெஞ்சம் பின் செல, சென்றோர்
கல்லினும் வலியர் மன்ற
5
பல் இதழ் உண்கண் அழப் பிரிந்தோரே.
பிரிவு நீட ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 4
 

 
335
அம்ம வாழி, தோழி! நம்வயின்
நெய்த்தோர் அன்ன செவிய எருவை
கற்புடை மருங்கில் கடு முடை பார்க்கும்
காடு நனி கடிய என்ப
5
நீடி இவண் வருநர் சென்ற ஆறே.
தலைமகன் சென்ற சுரத்தினிடத்துக் கொடுமை பிறர் கூறக்கேட்ட தலைமகள் ஆற்றாது தோழிக்குச் சொல்லியது. 5
 

 
336
அம்ம வாழி, தோழி! நம்வயின்
பிரியலர் போலப் புணர்ந்தோர் மன்ற
நின்றது இல் பொருள் பிணி முற்றிய
என்றூழ் நீடிய சுரன் இறந்தோரே.
பிரிவதற்கு முன்பு தங்களுடன் அவன் ஒழுகிய திறம் நினைந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 6
 

 
337
அம்ம வாழி, தோழி! நம்வயின்
மெய் உற விரும்பிய கை கவர் முயக்கினும்
இனிய மன்ற தாமே
பனி இருங் குன்றம் சென்றோர்க்குப் பொருளே.
தலைமகன் பொருள்வயிற் பிரிந்துழி, தன் முயக்கினும் அவற்குப் பிற்காலத்துப் பொருள் சிறந்தது எனத் தலைவி இரங்கித் தோழிக்குச் சொல்லியது. 7
 

 
338
அம்ம வாழி, தோழி! சாரல்
இலை இல மலர்ந்த ஓங்கு நிலை இலவம்
மலை உறு தீயின் சுரமுதல் தோன்றும்
பிரிவு அருங் காலையும், பிரிதல்
5
அரிது வல்லுநர் நம் காதலோரே.
தலைமகன் பிரிந்துழி. 'இக் காலத்தே பிரிந்தார்' எனத் தலைமகள் இரங்கிச் சொல்லியது. 8
 

 
339
அம்ம வாழி, தோழி! சிறியிலைக்
குறுஞ் சினை வேம்பின் நறும் பழம் உணீஇய
வாவல் உகக்கும் மாலையும்
இன்றுகொல், தோழி! அவர் சென்ற நாட்டே?
தலைமகன் குறித்த பருவ வரவின்கண் மாலைப் பொழுது கண்டு, ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 9
 

 
340
அம்ம வாழி, தோழி! காதலர்
உள்ளார்கொல்? நாம் மருள் உற்றனம்கொல்?
விட்டுச் சென்றனர் நம்மே
தட்டைத் தீயின் ஊர் அலர் எழவே.
தலைமகள் பிரிந்துழி, 'கடிதின் வருவர்' என ஆற்றியிருந்த தலைவி, அவன் நீட்டித்துழி, ஆற்றாது தோழிக்குச் சொல்லியது. 10
 

 
341
அவரோ வாரார்; தான் வந்தன்றே
குயில் பெடை இன் குரல் அகவ,
அயிர்க் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே!
தலைமகன் பிரிந்துழிக் குறித்த பருவம் வரக்கண்ட தலைமகள் சொல்லியது.
இனி வருகின்ற பாட்டு ஒன்பதிற்கும் இஃது ஒக்கும்.
 

 
342
அவரோ வாரார்; தான் வந்தன்றே
சுரும்பு களித்து ஆலும் இருஞ் சினைக்
கருங் கால் நுணவம் கமழும் பொழுதே! 2
 

 
343
அவரோ வாரார்; தான் வந்தன்றே
திணி நிலைக் கோங்கம் பயந்த
அணி மிகு கொழு முகை உடையும் பொழுதே! 3
 

 
344
அவரோ வாரார்; தான் வந்தன்றே
நறும் பூங் குரவம் பயந்த
செய்யாப் பாவை கொய்யும் பொழுதே! 4
 

 
345
அவரோ வாரார்; தான் வந்தன்றே
புதுப் பூ அதிரல் தாஅய்க்
கதுப்பு அறல் அணியும் காமர் பொழுதே! 5
 

 
346
அவரோ வாரார்; தான் வந்தன்றே
அம் சினைப் பாதிரி அலர்ந்தென,
செங் கண் இருங் குயில் அறையும் பொழுதே! 6
 

 
347
அவரோ வாரார்; தான் வந்தன்றே
எழில் தகை இள முலை பொலியப்
பொரிப் பூம் புன்கின் முறி திமிர் பொழுதே! 7
 

 
348
அவரோ வாரார்; தான் வந்தன்றே
வலம் சுரி மராஅம் வேய்ந்து, நம்
மணம் கமழ் தண் பொழில் மலரும் பொழுதே! 8
 

 
349
அவரோ வாரார்; தான் வந்தன்றே
பொரி கால் மாஞ் சினை புதைய
எரி கால் இளந் தளிர் ஈனும் பொழுதே! 9
 

 
350
அவரோ வாரார்; தான் வந்தன்றே
வேம்பின் ஒண் பூ உறைப்ப,
தேம் படு கிளவி அவர் தெளிக்கும் பொழுதே! 10
 

 
361
உயர்கரைக் கான் யாற்று அவிர்மணல் அகன்துறை
வேனில் பாதிரி விரி மலர் குவைஇத்
தொடலை தைஇய மடவரல் மகளே!
கண்ணினும் கதவ, நின் முலையே!
5
முலையினும் கதவ, நின் தட மென் தோளே!
புணர்ந்து உடன்போகிய தலைமகன் இடைச்சுரத்துக்கண் விளையாட்டு வகையால் பூத்தொடுக்கின்ற தலைமகளைக் கண்டு புகழ, அவள் அதற்கு நாணி, கண்புதைத்த வழிச் சொல்லியது. 1
 

 
370
வண் சினைக் கோங்கின் தண் கமழ் படலை
இருஞ் சிறை வண்டின் பெருங் கிளை மொய்ப்ப,
நீ நயந்து உறையப்பட்டோள்
யாவளோ? எம் மறையாதீமே.
பரத்தைஒருத்திக்குப் பூ அணிந்தான் என்பது கேட்ட தலைமகள், 'அஃது இல்லை' என்று மறைக்கும் தலைமகற்குக் கூறியது. 10
 

 
384
சேட் புலம் முன்னிய அசை நடை அந்தணிர்!
நும் ஒன்று இரந்தனென் மொழிவல்; எம் ஊர்,
'யாய் நயந்து எடுத்த ஆய்நலம் கவின
ஆர் இடை இறந்தனள்' என்மின்
5
நேர் இறை முன்கை என் ஆயத்தோர்க்கே.
உடன்போகிய தலைமகள் ஆண்டு எதிர்வரும் அந்தணர்க்குச் சொல்லியது. 4
 

 
385
'கடுங்கண் காளையொடு நெடுந் தேர் ஏறி,
கோள் வல் வேங்கைய மலை பிறக்கு ஒழிய,
வேறு பல் அருஞ் சுரம் இறந்தனள் அவள்' எனக்
கூறுமின் வாழியோ! ஆறு செல் மாக்கள்!
5
நல் தோள் நயந்து பாராட்டி,
எற் கெடுத்து இருந்த அறன் இல் யாய்க்கே.
வரைவு மறுத்துழி, உடன்போய தலைமகள் இடைச் சுரத்துக் கண்டாரை, 'யான் போகின்ற படியை யாய்க்கு நீர் கூற வேண்டும்' எனச் சொல்லியது. 5
 

 
392
வேய் வனப்பு இழந்த தோளும், வெயில் தெற
ஆய்கவின் தொலைந்த நுதலும், நோக்கிப்
பரியல் வாழி, தோழி! பரியின்,
எல்லை இல் இடும்பை தரூஉம்
5
நல் வரை நாடனொடு வந்தமாறே.
உடன்போய் மீண்டு வந்த தலைமகள் வழிவரல் வருத்தங் கண்டு, ஆற்றாளாகிய தோழிக்குச் சொல்லியது. 2
 

 
397
'கவிழ் மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை
குருளைப் பன்றி கொள்ளாது கழியும்
சுரம் நனி வாராநின்றனள்' என்பது
முன்னுற விரைந்த நீர்  மின்
5
இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே.
உடன்போய் மீள்கின்ற தலைமகள் தன் ஊர்க்குச் சொல்கின்றாரைக் கண்டு கூறியது. 7
 

 
451
கார் செய் காலையொடு கையறப் பிரிந்தோர்
தேர் தரு விருந்தின் தவிர்குதல் யாவது?
மாற்று அருந் தானை நோக்கி,
ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே!
வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் குறித்த பருவம் நினைந்து ஆற்றி இருந்த தலைமகள், அப் பருவ வரவின்கண் பாசறையினின்றும் வந்தார் அரசன் செய்தி கூறக் கேட்டு, ஆற்றாளாய்ச் சொல்லியது. 1
 

 
452
வறந்த ஞாலம் தெளிர்ப்ப வீசிக்
கறங்கு குரல் எழிலி கார் செய்தன்றே;
பகை வெங் காதலர் திறை தரு முயற்சி
மென் தோள் ஆய்கவின் மறைய,
5
பொன் புனை பீரத்து அலர் செய்தன்றே.
குறித்த பருவத்து வாராது தலைமகன் பகைமேல் முயல்கின்ற முயற்சி கேட்ட தலைமகள் கூறியது. 2
 

 
453
அவல்தொறும் தேரை தெவிட்ட, மிசைதொறும்
வெங் குரல் புள்ளினம் ஒலிப்ப, உதுக்காண்,
கார் தொடங்கின்றால் காலை; அதனால்,
நீர் தொடங்கினவால் நெடுங் கண்; அவர்
5
தேர் தொடங்கு இன்றால் நம்வயினானே.
பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 3
 

 
454
தளவின் பைங் கொடி தழீஇ, பையென
நிலவின் அன்ன நேர் அரும்பு பேணி,
கார் நயந்து எய்தும், முல்லை; அவர்
தேர் நயந்து உறையும், என் மாமைக் கவினே.
பருவ வரவின்கண் தலைமகள் ஆற்றாளாய்த் தோழிக்குச் சொல்லியது. 4
 

 
455
அரசு பகை தணிய, முரசு படச் சினைஇ,
ஆர் குரல் எழிலி கார் தொடங்கின்றே:
அளியவோ அளிய தாமே ஒளி பசந்து,
மின் இழை ஞெகிழச் சாஅய்,
5
தொல் நலம் இழந்த என் தட மென் தோளே!
ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 5
 

 
456
உள்ளார்கொல்லோ தோழி! வெள் இதழ்ப்
பகல் மதி உருவின் பகன்றை மா மலர்
வெண் கொடி ஈங்கைப் பைம் புதல் அணியும்
அரும் பனி அளைஇய கூதிர்
5
ஒருங்கு இவண் உறைதல், தெளித்து அகன்றோரே?
குறித்த பருவம் வரவும் தலைமகன் வந்திலனாக ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 6
 

 
457
பெய் பனி நலிய, உய்தல் செல்லாது
குருகினம் நரலும் பிரிவு அருங் காலை,
துறந்து அமைகல்லார், காதலர்;
மறந்து அமைகல்லாது, என் மடம் கெழு நெஞ்சே.
பருவ வரவின் கண் ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 7
 

 
458
துணர்க் காய்க் கொன்றை குழற் பழம் ஊழ்த்தன;
அதிர் பெயற்கு எதிரிய சிதர் கொள் தண் மலர்
பாணர் பெருமகன் பிரிந்தென,
மாண் நலம் இழந்த என் கண் போன்றனவே!
பருவங் குறித்துப் பிரிந்த தலைமகன் வரவு பார்த்திருந்த தலைமகள் பருவ முதிர்ச்சி கூறி, ஆற்றாளாய்  த்தது. 8
 

 
459
மெல் இறைப் பணைத் தோள் பசலை தீர,
புல்லவும் இயைவது கொல்லோ புல்லார்
ஆர் அரண் கடந்த சீர் கெழு தானை
வெல் போர் வேந்தனொடு சென்ற
5
நல் வயல் ஊரன் நறுந் தண் மார்பே?
'வேந்தன் வினை முற்றினான்; நின் காதலர் கடுக வருவர்' எனக் கேட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 9
 

 
460
பெருஞ் சின வேந்தனும் பாசறை முனியான்;
இருங் கலி வெற்பன் தூதும் தோன்றா;
ததை இலை வாழை முழுமுதல் அசைய,
இன்னா வாடையும் அலைக்கும்;
5
என் ஆகுவென்கொல், அளியென் யானே?
வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகனைப் பருவ முதிர்ச்சியினும் வரக் காணாது, தலைமகள் சொல்லியது. 10
 

 
473
பலர் புகழ் சிறப்பின் நும் குருசில் உள்ளிச்
செலவு நீ நயந்தனைஆயின், மன்ற
இன்னா அரும் படர் எம்வயின் செய்த
பொய் வலாளர் போல
5
கை வல் பாண! எம் மறவாதீமே.
'தலைமகன் பிரிந்த நாட்டில் செல்வேம்' என்ற அவன் பாணற்குத் தலைமகள் சொல்லியது. 3
 

 
474
மை அறு சுடர் நுதல் விளங்க, கறுத்தோர்
செய் அரண் சிதைத்த செரு மிகு தானையொடு
கதழ் பரி நெடுந் தேர் அதர் படக் கடைஇச்
சென்றவர்த் தருகுவல் என்னும்;
5
நன்றால் அம்ம, பாணனது அறிவே!
பிரிவின்கண் ஆற்றாமை கண்டு, 'தூதாகிச் சென்று அவனைக் கொணர்வல்' என்ற பாணன் கேட்பத் தலைமகள் கூறியது. 4
 

 
475
தொடி நிலை கலங்க வாடிய தோளும்
வடி நலன் இழந்த என் கண்ணும் நோக்கி,
பெரிது புலம்பினனே, சீறியாழ்ப் பாணன்;
எம் வெங் காதலொடு பிரிந்தோர்
5
தம்மோன் போலான்; பேர் அன்பினனே.
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தலைமகனுழை நின்று வந்தார் கேட்ப, தன் மெலிவு கண்டு இரங்கிய பாணனைத் தோழிக்கு மகிழ்ந்து சொல்லியது. 5
 

 
476
கருவி வானம் கார் சிறந்து ஆர்ப்ப,
பருவம் செய்தன பைங் கொடி முல்லை;
பல் ஆன் கோவலர் படலைக் கூட்டும்
அன்பு இல் மாலையும் உடைத்தோ
5
அன்பு இல் பாண! அவர் சென்ற நாடே?
'பிரிவாற்றாமை அவற்கும் உளதன்றே; நீ வேறுபடுகின்றது என்னை?' என்ற பாணற்குத் தலைமகள் கூறியது. 6
 

 
மேல்