தொடக்கம்   முகப்பு
தேரை
453
அவல்தொறும் தேரை தெவிட்ட, மிசைதொறும்
வெங் குரல் புள்ளினம் ஒலிப்ப, உதுக்காண்,
கார் தொடங்கின்றால் காலை; அதனால்,
நீர் தொடங்கினவால் நெடுங் கண்; அவர்
5
தேர் தொடங்கு இன்றால் நம்வயினானே.
பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 3
 

 
468
வரி நுணல் கறங்க, தேரை தெவிட்ட,
கார் தொடங்கின்றே காலை; இனி, நின்
நேர் இறைப் பணைத் தோட்கு ஆர் விருந்து ஆக,
வடி மணி நெடுந் தேர் கடைஇ,
5
வருவர் இன்று, நம் காதலோரே.
பிரிவு நீட ஆற்றாள் ஆய தலைமகட்குத் தோழி பருவங்காட்டி, 'இன்றே வருவர்' என வற்புறீஇயது. 8
 

 
494
வண்டு தாது ஊத, தேரை தெவிட்ட,
தண் கமழ் புறவின் முல்லை மலர,
இன்புறுத்தன்று பொழுதே;
நின் குறி வாய்த்தனம்; தீர்க, இனிப் படரே!
இதுவும் அது. 4
 

 
மேல்