109 | | அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நெய்தல் | | நீர்ப் படர் தூம்பின் பூக் கெழு துறைவன் | | எம் தோள் துறந்த காலை, எவன்கொல் | | பல் நாள் வரும், அவன் அளித்த பொழுதே? | |
| அறத்தொடு நின்ற பின்பு வரைவான் பிரிந்த தலைமகன் கடிதின் வாராதவழி, ஐயுற்ற செவிலி, 'அவன் நும்மைத் துறந்தான்போலும்; நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?' என்றாட்குத் தோழி சொல்லியது. 9 | | |