தொடக்கம்   முகப்பு
மருதம்
7
'வாழி ஆதன், வாழி அவினி!
அறம் நனி சிறக்க! அல்லது கெடுக!'
என வேட்டோளே யாயே: யாமே,
'உளைப் பூ மருதத்துக் கிளைக் குருகு இருக்கும்
5
தண் துறை ஊரன் தன் ஊர்க்
கொண்டனன் செல்க!' என வேட்டேமே.
இதுவும் அது. 7
 

 
மேல்