தொடக்கம்   முகப்பு
முல்லை
422
கடும் பரி நெடுந் தேர்க் கால் வல் புரவி,
நெடுங் கொடி முல்லையொடு தளவமலர் உதிர,
விரையுபு கடைஇ நாம் செல்லின்,
நிரை வளை முன்கை வருந்தலோ இலளே.
மீள்கின்றான் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது. 2
 

 
437
நன்றே, காதலர் சென்ற ஆறே!
ஆலித் தண் மழை தலைஇய,
வாலிய மலர்ந்த முல்லையும் உடைத்தே. 7
 

 
454
தளவின் பைங் கொடி தழீஇ, பையென
நிலவின் அன்ன நேர் அரும்பு பேணி,
கார் நயந்து எய்தும், முல்லை; அவர்
தேர் நயந்து உறையும், என் மாமைக் கவினே.
பருவ வரவின்கண் தலைமகள் ஆற்றாளாய்த் தோழிக்குச் சொல்லியது. 4
 

 
476
கருவி வானம் கார் சிறந்து ஆர்ப்ப,
பருவம் செய்தன பைங் கொடி முல்லை;
பல் ஆன் கோவலர் படலைக் கூட்டும்
அன்பு இல் மாலையும் உடைத்தோ
5
அன்பு இல் பாண! அவர் சென்ற நாடே?
'பிரிவாற்றாமை அவற்கும் உளதன்றே; நீ வேறுபடுகின்றது என்னை?' என்ற பாணற்குத் தலைமகள் கூறியது. 6
 

 
மேல்