தொடக்கம்   முகப்பு
முல்லை
412
காயா, கொன்றை, நெய்தல், முல்லை,
போது அவிழ் தளவமொடு பிடவு, அலர்ந்து கவினிப்
பூ அணி கொண்டன்றால் புறவே
பேர் அமர்க்கண்ணி! ஆடுகம், விரைந்தே.
இதுவும் அது. 2
 

 
422
கடும் பரி நெடுந் தேர்க் கால் வல் புரவி,
நெடுங் கொடி முல்லையொடு தளவமலர் உதிர,
விரையுபு கடைஇ நாம் செல்லின்,
நிரை வளை முன்கை வருந்தலோ இலளே.
மீள்கின்றான் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது. 2
 

 
437
நன்றே, காதலர் சென்ற ஆறே!
ஆலித் தண் மழை தலைஇய,
வாலிய மலர்ந்த முல்லையும் உடைத்தே. 7
 

 
456
உள்ளார்கொல்லோ தோழி! வெள் இதழ்ப்
பகல் மதி உருவின் பகன்றை மா மலர்
வெண் கொடி ஈங்கைப் பைம் புதல் அணியும்
அரும் பனி அளைஇய கூதிர்
5
ஒருங்கு இவண் உறைதல், தெளித்து அகன்றோரே?
குறித்த பருவம் வரவும் தலைமகன் வந்திலனாக ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 6
 

 
446
முல்லை நாறும் கூந்தல் கமழ் கொள
நல்ல காண்குவம், மாஅயோயே!
பாசறை அருந் தொழில் உதவி, நம்
காதல் நல் நாட்டுப் போதரும் பொழுதே.
பாசறைக்கண் இருந்த தலைமகன் பருவ வரவின்கண் உருவு வெளிப்பாடு கண்டு சொல்லியது. 6
 

 
447
பிணி வீடு பெறுக, மன்னவன் தொழிலே!
பனி வளர் தளவின் சிரல் வாய்ச் செம் முகை,
ஆடு சிறை வண்டு அவிழ்ப்ப,
பாடு சான்ற; காண்கம், வாணுதலே!
வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் அவண் வினைமுற்றி மீளும் வேட்கையனாய், பருவ வரவின்கண் தலைமகளை நினைத்துச் சொல்லியது. 7
 

 
448
தழங்குரல் முரசம் காலை இயம்ப,
கடுஞ் சின வேந்தன் தொழில் எதிர்ந்தனனே;
மெல் அவல் மருங்கின் முல்லை பூப்பப்
பொங்கு பெயல் கனை துளி கார் எதிர்ந்தன்றே;
5
அம் சில் ஓதியை உள்ளுதொறும்,
துஞ்சாது அலமரல் நாம் எதிர்ந்தனமே.
வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் பருவம் வந்த இடத்தினும் மீளப் பெறாது, அரசன் செய்தியும், பருவத்தின் செய்தியும், தன் செய்தியும், கூறி ஆற்றானாயது. 8
 

 
449
முரம்பு கண் உடையத் திரியும் திகிரியொடு
பணை நிலை முணைஇய வயமாப் புணர்ந்து,
திண்ணிதின் மாண்டன்று தேரே;
ஒண்ணுதல் காண்குவம், வேந்து வினை விடினே.
பாசறைக்கண் வேந்தனொடு வினைப் பொருட்டால் போந்திருந்த தலைமகன் அவ் வேந்தன் மாற்று வேந்தர் தரு திறைகொண்டு மீள்வானாகப் பொருந்துழி, தானும் மீட்சிக்குத் தேர் சமைத்த எல்லைக்கண்ணே, அவ் அரசன், பொருத்தம் தவிர்ந்து மீண்
 

 
454
தளவின் பைங் கொடி தழீஇ, பையென
நிலவின் அன்ன நேர் அரும்பு பேணி,
கார் நயந்து எய்தும், முல்லை; அவர்
தேர் நயந்து உறையும், என் மாமைக் கவினே.
பருவ வரவின்கண் தலைமகள் ஆற்றாளாய்த் தோழிக்குச் சொல்லியது. 4
 

 
499
பிடவம் மலர, தளவம் நனைய,
கார் கவின் கொண்ட கானம் காணின்,
'வருந்துவள் பெரிது' என, அருந் தொழிற்கு அகலாது,
வந்தனரால், நம் காதலர்
5
அம் தீம் கிளவி! நின் ஆய் நலம் கொண்டே.
இதுவும் அது. 9
 

 
மேல்