தொடக்கம்
முகப்பு
முள்ளி
21
முள்ளி நீடிய முது நீர் அடைகரைப்
புள்ளிக் களவன் ஆம்பல் அறுக்கும்
தண் துறை ஊரன் தெளிப்பவும்,
உண்கண் பசப்பது எவன்கொல்? அன்னாய்!'
'புறத்தொழுக்கம் எனக்கு இனி இல்லை' என்று தலைமகன் தெளிப்பவும், 'அஃது உளது' என்று வேறுபடும் தலைமகட்குத் தோழி சொல்லியது. 1
உரை
22
அள்ளல் ஆடிய புள்ளிக் களவன்
முள்ளி வேர் அளைச் செல்லும் ஊரன்
நல்ல சொல்லி மணந்து, 'இனி
நீயேன்' என்றது எவன்கொல்? அன்னாய்!'
களவினில் புணர்ந்து. பின்பு வரைந்து கொண்டு ஒழுகாநின்றதலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்றாக, ஆற்றாளாகியதலைமகள் தோழிக்குச் சொல்லியது. 2
உரை
23
முள்ளி வேர் அளைக் களவன் ஆட்டி,
பூக் குற்று, எய்திய புனல் அணி ஊரன்
தேற்றம் செய்து நப்புணர்ந்து, இனித்
தாக்கு அணங்கு ஆவது எவன்கொல்? அன்னாய்!
இதுவும் அது. 3
உரை
மேல்