தொடக்கம்
முகப்பு
வரால்
48
வலை வல் பாண்மகன் வால் எயிற்று மடமகள்
வராஅல் சொரிந்த வட்டியுள், மனையோள்
யாண்டு கழி வெண்ணெல் நிறைக்கும் ஊர!
வேண்டேம், பெரும! நின் பரத்தை
5
ஆண்டுச் செய் குறியொடு ஈண்டு நீ வரலே.
பரத்தையர்மாட்டு ஒழுகாநின்று தன் மனைக்கண்
சென்ற தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. 8
உரை
மேல்