தொடக்கம்   முகப்பு
வாழை
460
பெருஞ் சின வேந்தனும் பாசறை முனியான்;
இருங் கலி வெற்பன் தூதும் தோன்றா;
ததை இலை வாழை முழுமுதல் அசைய,
இன்னா வாடையும் அலைக்கும்;
5
என் ஆகுவென்கொல், அளியென் யானே?
வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகனைப் பருவ முதிர்ச்சியினும் வரக் காணாது, தலைமகள் சொல்லியது. 10
 

 
மேல்