தொடக்கம்   முகப்பு
வாவல்
339
அம்ம வாழி, தோழி! சிறியிலைக்
குறுஞ் சினை வேம்பின் நறும் பழம் உணீஇய
வாவல் உகக்கும் மாலையும்
இன்றுகொல், தோழி! அவர் சென்ற நாட்டே?
தலைமகன் குறித்த பருவ வரவின்கண் மாலைப் பொழுது கண்டு, ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 9
 

 
378
செல்லிய முயலிப் பாஅய சிறகர்
வாவல் உகக்கும் மாலை, யாம் புலம்பப்
போகிய அவட்கோ நோவேன்; தே மொழித்
துணை இலள் கலிழும் நெஞ்சின்
5
இணை ஏர் உண்கண் இவட்கு நோவதுவே.
தலைமகள் உடன்போயவழி, அவள் தோழி ஆற்றாமை கண்ட நற்றாய் சொல்லியது. 8
 

 
மேல்