தொடக்கம்   முகப்பு
அயலோர்
393
துறந்ததற் கொண்டு துயர் அடச் சாஅய்,
அறம் புலந்து பழிக்கும் அளைகணாட்டி!
எவ்வ நெஞ்சிற்கு ஏமம் ஆக
வந்தனளோ நின் மட மகள்
5
வெந் திறல் வெள் வேல் விடலை முந்துறவே?
உடன்போய்த் தலைமகள் மீண்டு வந்துழி, அயலோர் அவள் தாய்க்குச் சொல்லியது. 3
 

 
மேல்