26 | | கரந்தைஅம் செறுவில் துணை துறந்து, களவன் | | வள்ளை மென் கால் அறுக்கும் ஊரன் | | எம்மும், பிறரும், அறியான்; | | இன்னன் ஆவது எவன்கொல்? அன்னாய்! | |
| தலைமகற்கு வாயிலாகப் புகுந்தார், 'நின் முனிவிற்கு அவன்பொருந்தாநின்றான்' என்றவழி, தலைமகட்குத் தோழி, 'அவன்பாடு அஃது இல்லை' என்பதுபடச் சொல்லியது. 6 | | |