தொடக்கம்   முகப்பு
காந்தள்
226
அம்ம வாழி,தோழி!நம் மலை
நறுந்தண் சிலம்பின் நாறு குலைக் காந்தள்
கொங்கு உண் வண்டின் பெயர்ந்து புறமாறி, நின்
வன்புடை விறல் கவின் கொண்ட
5
அன்பிலாளன் வந்தனன், இனியே.
வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் நீட்டித்து வந்துழித் தோழி தலைமகட்குச் சொல்லியது. 6

 
254
குன்றக் குறவன் ஆரம் அறுத்தென,
நறும் புகை சூழ்ந்து காந்தள் நாறும்
வண்டு இமிர் சுடர் நுதல் குறுமகள்!
கொண்டனர், செல்வர் தம் குன்று கெழு நாட்டே.
உடன்போக்கு உடன்பட வேண்டிய தோழி தலைமகட்குச் சொல்லியது. 4
 

 
259
குன்ற குறவன் காதல் மட மகள்
மன்ற வேங்கை மலர் சில கொண்டு,
மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தி,
தேம் பலிச் செய்த ஈர் நறுங் கையள்;
5
மலர்ந்த காந்தள் நாறிக்
கலிழ்ந்த கண்ணள் எம் அணங்கியோளே.
வரையத் துணிந்த தலைமகன் வரைவு முடித்தற்குத் தலைமகள் வருந்துகின்ற வருத்தம் தோழி காட்டக் கண்டு, 'இனி அது கடுக முடியும்' என உவந்த உள்ளத்தனாய், தன்னுள்ளே சொல்லியது. 9
 

 
420
பொன் என மலர்ந்த, கொன்றை; மணி எனத்
தேம் படு காயா மலர்ந்த; தோன்றியொடு
நன்னலம் எய்தினை, புறவே! நின்னைக்
காணிய வருதும், யாமே
5
வாள் நுதல் அரிவையொடு ஆய் நலம் படர்ந்தே.
குறித்த பருவத்து எய்திய, அணித்தாக வந்த தலைமகன் பருவத்தால் அணிகொண்ட புறவை நோக்கிச் சொல்லியது. 10
 

 
440
நன்றே, காதலர் சென்ற ஆறே!
தண் பெயல் அளித்த பொழுதின்
ஒண் சுடர்த் தோன்றியும் தளவமும் உடைத்தே. 10
 

 
மேல்