259 | | குன்ற குறவன் காதல் மட மகள் | | மன்ற வேங்கை மலர் சில கொண்டு, | | மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தி, | | தேம் பலிச் செய்த ஈர் நறுங் கையள்; | 5 | மலர்ந்த காந்தள் நாறிக் | | கலிழ்ந்த கண்ணள் எம் அணங்கியோளே. | |
| வரையத் துணிந்த தலைமகன் வரைவு முடித்தற்குத் தலைமகள் வருந்துகின்ற வருத்தம் தோழி காட்டக் கண்டு, 'இனி அது கடுக முடியும்' என உவந்த உள்ளத்தனாய், தன்னுள்ளே சொல்லியது. 9 | | |