357 | | குரவம் மலர, மரவம் பூப்ப, | | சுரன் அணி கொண்ட கானம் காணூஉ, | | 'அழுங்குக, செய்பொருள் செலவு!' என விரும்பி, நின் | | அம் கலிழ் மாமை கவின | 5 | வந்தனர் தோழி! நம் காதலோரே. | |
| பொருள்வயிற் பிரிந்து ஆண்டு உறைகின்ற தலைமகன் குறித்த பருவ வரவு கண்டு, கடிதின் மீண்டு வந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது. 7 |
|