தொடக்கம்   முகப்பு
முதலை
5
'வாழி ஆதன், வாழி அவினி!
பசி இல்லாகுக! பிணி சேண் நீங்குக!'
என வேட்டோளே, யாயே: யாமே,
'முதலைப் போத்து முழு மீன் ஆரும்
5
தண் துறை ஊரன் தேர் எம்
முன்கடை நிற்க' என வேட்டேமே.
இதுவும் அது. 5
 

 
24
தாய் சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு
பிள்ளை தின்னும் முதலைத்து அவன் ஊர்
எய்தினன் ஆகின்று கொல்லோ? மகிழ்நன்
பொலந் தொடி தெளிர்ப்ப முயங்கியவர்
5
நலம் கொண்டு துறப்பது எவன்கொல்? அன்னாய்!
'பரத்தையருள்ளும் ஒருத்தியை விட்டு ஒருத்தியைப் பற்றி ஒழுகுகின்றான்' என்பது கேட்ட தோழி, வாயிலாய் வந்தார் கேட்ப, தலைமகட்குச் சொல்லியது. 4

 
41
'தன் பார்ப்புத் தின்னும் அன்பு இல் முதலையொடு
வெண் பூம் பொய்கைத்து, அவன் ஊர்' என்ப; அதனால்
தன் சொல் உணர்ந்தோர் மேனி
பொன் போல் செய்யும் ஊர்கிழவோனே.
கழறித் தெருட்டற் பாலராகிய அகம் புகல் மரபின் வாயில்கள் புகுந்துழி, தலைவனையும் பாணன் முதலாகிய பக்கத்தாரையும் இகழ்ந்து, தலைவி கூறியது. 1

 
மேல்