தொடக்கம் முகப்பு
தொழுது
 
475
தொடி நிலை கலங்க வாடிய தோளும்
வடி நலன் இழந்த என் கண்ணும் நோக்கி,
பெரிது புலம்பினனே, சீறியாழ்ப் பாணன்;
எம் வெங் காதலொடு பிரிந்தோர்
5
தம்மோன் போலான்; பேர் அன்பினனே.
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தலைமகனுழை நின்று வந்தார் கேட்ப, தன் மெலிவு கண்டு இரங்கிய பாணனைத் தோழிக்கு மகிழ்ந்து சொல்லியது. 5
 

 
மேல்