435 | | நன்றே, காதலர் சென்ற ஆறே! | | நிலன் அணி நெய்தல் மலர, | |
| பொலன் அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே. 5 | |
436 | | நன்றே, காதலர் சென்ற ஆறே! | | நன் பொன் அன்ன சுடர் இணர்க் | |
| கொன்றையொடு மலர்ந்த குருந்துமார் உடைத்தே. 6 | | |
437 | | நன்றே, காதலர் சென்ற ஆறே! | | ஆலித் தண் மழை தலைஇய, | |
| வாலிய மலர்ந்த முல்லையும் உடைத்தே. 7 | | |
438 | | நன்றே, காதலர் சென்ற ஆறே! | | பைம் புதல் பல் பூ மலர, | |
| இன்புறத் தகுந பண்புமார் உடைத்தே. 8 | | |
439 | | நன்றே, காதலர் சென்ற ஆறே! | | குருந்தங் கண்ணிக் கோவலர் | |
| பெருந் தண் நிலைய பாக்கமும் உடைத்தே. 9 | | |
440 | | நன்றே, காதலர் சென்ற ஆறே! | | தண் பெயல் அளித்த பொழுதின் | |
| ஒண் சுடர்த் தோன்றியும் தளவமும் உடைத்தே. 10 | | |
441 | | ஐய ஆயின, செய்யோள் கிளவி; | | கார் நாள் உருமொடு கையறப் பிரிந்தென, | | நோய் நன்கு செய்தன எமக்கே; | | யாம் உறு துயரம் அவள் அறியினோ நன்றே. | |
| சென்ற வினை முடியாமையின், கார்காலம் வந்த இடத்து, மீளப் பெறாத தலைமகன்,தலைமகள் உழைநின்றும் வந்த தூதர் வார்த்தை கேட்டு, இரங்கியது. 1 | | |
442 | | பெருஞ் சின வேந்தன் அருந் தொழில் தணியின், | | விருந்து நனி பெறுதலும் உரியள்மாதோ | | இருண்டு தோன்று விசும்பின் உயர்நிலை உலகத்து | | அருந்ததி அனைய கற்பின், | 5 | குரும்பை மணிப் பூண் புதல்வன் தாயே. | |
| வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் வினை முடியாமையின், பாசறைக்கண் இருந்து பருவ வரவின்கண் சொல்லியது. 2 | | |
443 | | நனி சேய்த்து என்னாது, நற்றேர் ஏறிச் சென்று, | | இலங்கு நிலவின் இளம் பிறை போலக் | | காண்குவெம் தில்ல, அவள் கவின் பெறு சுடர் நுதல் | | விண் உயர் அரண் பல வௌவிய | 5 | மண்ணுறு முரசின் வேந்து தொழில் விடினே. | |
|
444 | | பெருந் தோள் மடவரல் காண்குவெம் தில்ல | | நீள் மதில் அரணம் பாய்ந்தெனத் தொடி பிளந்து | | வைந் நுதி மழுகிய தடங் கோட்டு யானை, | | வென் வேல், வேந்தன் பகை தணிந்து, | 5 | இன்னும் தன் நாட்டு முன்னுதல் பெறினே. | |
|
445 | | புகழ் சால் சிறப்பின் காதலி புலம்பத் | | துறந்து வந்தனையே, அரு தொழில் கட்டூர் | | நல் ஏறு தழீஇ நாகு பெயர் காலை | | உள்ளுதொறும் கலிழும் நெஞ்சம்! | 5 | வல்லே எம்மையும் வர இழைத்தனையே! | |
| பாசறைக்கண் இருந்த தலைமகன் பருவ வரவின்கண் தலைமகளை நினைந்து, நெஞ்சொடு புலந்து சொல்லியது. 5 | | |
446 | | முல்லை நாறும் கூந்தல் கமழ் கொள | | நல்ல காண்குவம், மாஅயோயே! | | பாசறை அருந் தொழில் உதவி, நம் | | காதல் நல் நாட்டுப் போதரும் பொழுதே. | |
| பாசறைக்கண் இருந்த தலைமகன் பருவ வரவின்கண் உருவு வெளிப்பாடு கண்டு சொல்லியது. 6 | | |
447 | | பிணி வீடு பெறுக, மன்னவன் தொழிலே! | | பனி வளர் தளவின் சிரல் வாய்ச் செம் முகை, | | ஆடு சிறை வண்டு அவிழ்ப்ப, | | பாடு சான்ற; காண்கம், வாணுதலே! | |
| வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் அவண் வினைமுற்றி மீளும் வேட்கையனாய், பருவ வரவின்கண் தலைமகளை நினைத்துச் சொல்லியது. 7 | | |
448 | | தழங்குரல் முரசம் காலை இயம்ப, | | கடுஞ் சின வேந்தன் தொழில் எதிர்ந்தனனே; | | மெல் அவல் மருங்கின் முல்லை பூப்பப் | | பொங்கு பெயல் கனை துளி கார் எதிர்ந்தன்றே; | 5 | அம் சில் ஓதியை உள்ளுதொறும், | | துஞ்சாது அலமரல் நாம் எதிர்ந்தனமே. | |
| வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் பருவம் வந்த இடத்தினும் மீளப் பெறாது, அரசன் செய்தியும், பருவத்தின் செய்தியும், தன் செய்தியும், கூறி ஆற்றானாயது. 8 | | |
449 | | முரம்பு கண் உடையத் திரியும் திகிரியொடு | | பணை நிலை முணைஇய வயமாப் புணர்ந்து, | | திண்ணிதின் மாண்டன்று தேரே; | | ஒண்ணுதல் காண்குவம், வேந்து வினை விடினே. | |
| பாசறைக்கண் வேந்தனொடு வினைப் பொருட்டால் போந்திருந்த தலைமகன் அவ் வேந்தன் மாற்று வேந்தர் தரு திறைகொண்டு மீள்வானாகப் பொருந்துழி, தானும் மீட்சிக்குத் தேர் சமைத்த எல்லைக்கண்ணே, அவ் அரசன், பொருத்தம் தவிர்ந்து மீண் | | |
450 | | முரசு மாறு இரட்டும் அருந் தொழில் பகை தணிந்து | | நாடு முன்னியரோ பீடு கெழு வேந்தன்; | | வெய்ய உயிர்க்கும் நோய் தணிய, | | செய்யோள் இளமுலைப் படீஇயர், என் கண்ணே! | |
| வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் வினை முற்றாமையின், பாசறைக்கண் இருந்து, தன் மனக்கருத்து த்தது. 10 | | |
451 | | கார் செய் காலையொடு கையறப் பிரிந்தோர் | | தேர் தரு விருந்தின் தவிர்குதல் யாவது? | | மாற்று அருந் தானை நோக்கி, | | ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே! | |
| வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் குறித்த பருவம் நினைந்து ஆற்றி இருந்த தலைமகள், அப் பருவ வரவின்கண் பாசறையினின்றும் வந்தார் அரசன் செய்தி கூறக் கேட்டு, ஆற்றாளாய்ச் சொல்லியது. 1 | | |
452 | | வறந்த ஞாலம் தெளிர்ப்ப வீசிக் | | கறங்கு குரல் எழிலி கார் செய்தன்றே; | | பகை வெங் காதலர் திறை தரு முயற்சி | | மென் தோள் ஆய்கவின் மறைய, | 5 | பொன் புனை பீரத்து அலர் செய்தன்றே. | |
| குறித்த பருவத்து வாராது தலைமகன் பகைமேல் முயல்கின்ற முயற்சி கேட்ட தலைமகள் கூறியது. 2 | | |
453 | | அவல்தொறும் தேரை தெவிட்ட, மிசைதொறும் | | வெங் குரல் புள்ளினம் ஒலிப்ப, உதுக்காண், | | கார் தொடங்கின்றால் காலை; அதனால், | | நீர் தொடங்கினவால் நெடுங் கண்; அவர் | 5 | தேர் தொடங்கு இன்றால் நம்வயினானே. | |
| பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 3 | | |
454 | | தளவின் பைங் கொடி தழீஇ, பையென | | நிலவின் அன்ன நேர் அரும்பு பேணி, | | கார் நயந்து எய்தும், முல்லை; அவர் | | தேர் நயந்து உறையும், என் மாமைக் கவினே. | |
| பருவ வரவின்கண் தலைமகள் ஆற்றாளாய்த் தோழிக்குச் சொல்லியது. 4 | | |
455 | | அரசு பகை தணிய, முரசு படச் சினைஇ, | | ஆர் குரல் எழிலி கார் தொடங்கின்றே: | | அளியவோ அளிய தாமே ஒளி பசந்து, | | மின் இழை ஞெகிழச் சாஅய், | 5 | தொல் நலம் இழந்த என் தட மென் தோளே! | |
| ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 5 | | |
456 | | உள்ளார்கொல்லோ தோழி! வெள் இதழ்ப் | | பகல் மதி உருவின் பகன்றை மா மலர் | | வெண் கொடி ஈங்கைப் பைம் புதல் அணியும் | | அரும் பனி அளைஇய கூதிர் | 5 | ஒருங்கு இவண் உறைதல், தெளித்து அகன்றோரே? | |
| குறித்த பருவம் வரவும் தலைமகன் வந்திலனாக ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 6 | | |
457 | | பெய் பனி நலிய, உய்தல் செல்லாது | | குருகினம் நரலும் பிரிவு அருங் காலை, | | துறந்து அமைகல்லார், காதலர்; | | மறந்து அமைகல்லாது, என் மடம் கெழு நெஞ்சே. | |
| பருவ வரவின் கண் ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 7 | | |
458 | | துணர்க் காய்க் கொன்றை குழற் பழம் ஊழ்த்தன; | | அதிர் பெயற்கு எதிரிய சிதர் கொள் தண் மலர் | | பாணர் பெருமகன் பிரிந்தென, | | மாண் நலம் இழந்த என் கண் போன்றனவே! | |
| பருவங் குறித்துப் பிரிந்த தலைமகன் வரவு பார்த்திருந்த தலைமகள் பருவ முதிர்ச்சி கூறி, ஆற்றாளாய் த்தது. 8 | | |
459 | | மெல் இறைப் பணைத் தோள் பசலை தீர, | | புல்லவும் இயைவது கொல்லோ புல்லார் | | ஆர் அரண் கடந்த சீர் கெழு தானை | | வெல் போர் வேந்தனொடு சென்ற | 5 | நல் வயல் ஊரன் நறுந் தண் மார்பே? | |
| 'வேந்தன் வினை முற்றினான்; நின் காதலர் கடுக வருவர்' எனக் கேட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 9 | | |
460 | | பெருஞ் சின வேந்தனும் பாசறை முனியான்; | | இருங் கலி வெற்பன் தூதும் தோன்றா; | | ததை இலை வாழை முழுமுதல் அசைய, | | இன்னா வாடையும் அலைக்கும்; | 5 | என் ஆகுவென்கொல், அளியென் யானே? | |
| வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகனைப் பருவ முதிர்ச்சியினும் வரக் காணாது, தலைமகள் சொல்லியது. 10 | | |
461 | | வான் பிசிர்க் கருவியின் பிடவு முகை தகைய, | | கான் பிசிர் கற்ப, கார் தொடங்கின்றே; | | இனையல் வாழி, தோழி; எனையதூஉம் | | நிற் துறந்து அமைகுவர்அல்லர், | 5 | வெற்றி வேந்தன் பாசறையோரே. | |
| பிரிவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி வரவு கூறி, ' த்த பருவம் வந்ததாகலான், அவர் வருவர்; என வற்புறீஇயது. 1 | | |
462 | | ஏதில பெய்ம் மழை கார் என மயங்கிய | | பேதைஅம் கொன்றைக் கோதை நிலை நோக்கி, | | எவன் இனி, மடந்தை! நின் கலிழ்வே? நின்வயின் | | தகை எழில் வாட்டுநர் அல்லர், | 5 | முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரே. | |
| பருவங் கண்டு வேறுபட்ட கிழத்தியைத் தோழி, 'பருவம் அன்று' என வற்புறீஇயது. 2 | | |
463 | | புதல்மிசை நறு மலர் கவின் பெறத் தொடரி, நின் | | நலம் மிகு கூந்தல் தகை கொளப் புனைய | | வாராது அமையலோ இலரே; நேரார் | | நாடு படு நன்கலம் தரீஇயர், | 5 | நீடினர் தோழி! நம் காதலோரே. | |
| குறித்த பருவம் வரவும் தலைமகன் தாழ்த்துழி, தோழி காரணம் கூறி, வற்புறீஇயது. 3 | | |
464 | | கண் எனக் கருவிளை மலர, பொன் என | | இவர் கொடிப் பீரம் இரும் புதல் மலரும் | | அற்சிரம் மறக்குநர் அல்லர் நின் | | நல் தோள் மருவரற்கு உலமருவோரே. | |
| வரைந்த அணுமைக்கண்ணே பிரிந்த தலைமகன் குறித்த பருவம் வந்துழி, 'இதனை மறந்தார்' என்ற தலைமகட்குத் தோழி, 'வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாகலான் மறத்தல் கூடாது' எனச் சொல்லி வற்புறீஇயது. 4 | | |
465 | | நீர் இகுவன்ன நிமிர் பரி நெடுந் தேர், | | கார் செய் கானம் கவின் பட, கடைஇ, | | மயங்கு மலர் அகலம் நீ இனிது முயங்க, | | வருவர், வாழி, தோழி! | 5 | செரு வெங் குருசில் தணிந்தனன் பகையே. | |
| பருவம் கண்டு வேறுபட்ட தலைமகளை, 'வேந்தன் வினைமுடித்தான்' எனக் கேட்ட தோழி, 'வருவர்' என வற்புறீஇயது. 5 | | |
466 | | வேந்து விடு விழுத் தொழில் எய்தி, ஏந்து கோட்டு | | அண்ணல் யானை அரசு விடுத்து, இனியே | | எண்ணிய நாளகம் வருதல் பெண் இயல் | | காமர் சுடர் நுதல் விளங்கும் | 5 | தே மொழி அரிவை! தெளிந்திசின் யானே. | |
| பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகளை, 'அவர் போன காரியம் இடையூறு இன்றி முடிந்து வருதல் பல்லாற்றானும் தெளிந்தேன்' எனத் தோழி சொல்லி ஆற்றுவித்தது. 6 | | |
467 | | புனை இழை நெகிழச் சாஅய், நொந்துநொந்து | | இனையல் வாழியோ இகுளை! 'வினைவயின் | | சென்றோர் நீடினர் பெரிது' என: தங்காது | | நம்மினும் விரையும் என்ப, | 5 | வெம் முரண் யானை விறல் போர் வேந்தே. | |
| தலைமகன் வினைவயிற் பிரிய ஆற்றாள் ஆகிய தலைமகளைத் தோழி வற்புறீஇயது. 7 | | |
468 | | வரி நுணல் கறங்க, தேரை தெவிட்ட, | | கார் தொடங்கின்றே காலை; இனி, நின் | | நேர் இறைப் பணைத் தோட்கு ஆர் விருந்து ஆக, | | வடி மணி நெடுந் தேர் கடைஇ, | 5 | வருவர் இன்று, நம் காதலோரே. | |
| பிரிவு நீட ஆற்றாள் ஆய தலைமகட்குத் தோழி பருவங்காட்டி, 'இன்றே வருவர்' என வற்புறீஇயது. 8 | | |
469 | | பைந் தினை உணங்கல் செம் பூழ் கவரும் | | வன்புல நாடன் தரீஇய, வலன் ஏர்பு | | அம் கண் இரு விசும்பு அதிர, ஏறொடு | | பெயல் தொடங்கின்றே வானம்; | 5 | காண்குவம்; வம்மோ, பூங் கணோயே! | |
| பிரிவு நீட ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி 'அவரை நமக்குத் தருதற்கு வந்தது காண் இப் பருவம்' எனக் காட்டி வற்புறீஇயது. 9 | | |
470 | | இரு நிலம் குளிர்ப்ப வீசி, அல்கலும் | | அரும் பனி அளைஇய அற்சிரக் காலை | | உள்ளார், காதலர், ஆயின், ஒள்ளிழை! | | சிறப்பொடு விளங்கிய காட்சி | 5 | மறக்க விடுமோ, நின் மாமைக் கவினே? | |
| பருவம் வந்தது கண்டு, 'தாம் குறித்த இதனை மறந்தார்' என வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. 10 | | |
471 | | எல் வளை நெகிழ, மேனி வாட, | | பல் இதழ் உண்கண் பனி அலைக் கலங்க, | | துறந்தோன் மன்ற, மறம் கெழு குருசில்; | | அது மற்று உணர்ந்தனை போலாய் | 5 | இன்னும் வருதி; என் அவர் தகவே? | |
| பருவ வரவின்கண் தூதாகி வந்த பாணன் கூறிய வழி, தோழி சொல்லியது. 1 | | |
472 | | கை வல் சீறியாழ்ப் பாண! நுமரே | | செய்த பருவம் வந்து நின்றதுவே; | | எம்மின் உணரார்ஆயினும், தம்வயின் | | பொய் படு கிளவி நாணலும் | 5 | எய்யார் ஆகுதல், நோகோ யானே? | |
| குறித்த பருவம் வரவும் தலைமகன் வாரானாகியவழி, தூதாய் வந்த பாணற்குத் தோழி கூறியது. 2 | | |
473 | | பலர் புகழ் சிறப்பின் நும் குருசில் உள்ளிச் | | செலவு நீ நயந்தனைஆயின், மன்ற | | இன்னா அரும் படர் எம்வயின் செய்த | | பொய் வலாளர் போல | 5 | கை வல் பாண! எம் மறவாதீமே. | |
| 'தலைமகன் பிரிந்த நாட்டில் செல்வேம்' என்ற அவன் பாணற்குத் தலைமகள் சொல்லியது. 3 | | |
474 | | மை அறு சுடர் நுதல் விளங்க, கறுத்தோர் | | செய் அரண் சிதைத்த செரு மிகு தானையொடு | | கதழ் பரி நெடுந் தேர் அதர் படக் கடைஇச் | | சென்றவர்த் தருகுவல் என்னும்; | 5 | நன்றால் அம்ம, பாணனது அறிவே! | |
| பிரிவின்கண் ஆற்றாமை கண்டு, 'தூதாகிச் சென்று அவனைக் கொணர்வல்' என்ற பாணன் கேட்பத் தலைமகள் கூறியது. 4 | | |
475 | | தொடி நிலை கலங்க வாடிய தோளும் | | வடி நலன் இழந்த என் கண்ணும் நோக்கி, | | பெரிது புலம்பினனே, சீறியாழ்ப் பாணன்; | | எம் வெங் காதலொடு பிரிந்தோர் | 5 | தம்மோன் போலான்; பேர் அன்பினனே. | |
| பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தலைமகனுழை நின்று வந்தார் கேட்ப, தன் மெலிவு கண்டு இரங்கிய பாணனைத் தோழிக்கு மகிழ்ந்து சொல்லியது. 5 | | |
476 | | கருவி வானம் கார் சிறந்து ஆர்ப்ப, | | பருவம் செய்தன பைங் கொடி முல்லை; | | பல் ஆன் கோவலர் படலைக் கூட்டும் | | அன்பு இல் மாலையும் உடைத்தோ | 5 | அன்பு இல் பாண! அவர் சென்ற நாடே? | |
| 'பிரிவாற்றாமை அவற்கும் உளதன்றே; நீ வேறுபடுகின்றது என்னை?' என்ற பாணற்குத் தலைமகள் கூறியது. 6 | | |
477 | | பனி மலர் நெடுங் கண் பசலை பாய, | | துனி மலி துயரமொடு அரும் படர் உழப்போள் | | கையறு நெஞ்சிற்கு உயவுத் துணை ஆக, | | சிறு வரைத் தங்குவைஆயின், | 5 | காண்குவை மன்னால் பாண! எம் தேரே. | |
| தலைமகள்மாட்டுப் பாணனைத் தூதாக விடுத்த தலைமகன் கூறியது. 7 | | |
478 | | 'நீடினம்' என்று கொடுமை தூற்றி, | | வாடிய நுதலள் ஆகி, பிறிது நினைந்து, | | யாம் வெங் காதலி நோய் மிகச் சாஅய், | | சொல்லியது மதி, நீயே | 5 | முல்லை நல் யாழ்ப் பாண! மற்று எமக்கே? | |
| பிரிந்து உறையும் தலைமகன் தலைமகள் விட்ட தூதாய்ச் சென்ற பாணனை, 'அவள் சொல்லிய திறம் கூறு' எனக் கேட்டது. 8 | | |
479 | | சொல்லுமதி பாண! சொல்லுதோறு இனிய | | நாடு இடை விலங்கிய எம்வயின், நாள்தொறும், | | அரும் பனி கலந்த அருள் இல் வாடை | | தனிமை எள்ளும் பொழுதில், | 5 | பனி மலர்க் கண்ணி கூறியது எமக்கே. | |
| தலைவி விடத் தூதாய்ச் சென்ற பாணன் மாற்றம் கூறக் கேட்ட தலைமகன், 'இவ்வாடை வருத்தத்திற்கு மருந்தாக இன்னும் கூற வேண்டும்' எனக் கூறியது. 9 | | |
480 | | நினக்கு யாம் பாணரேம் அல்லேம்; எமக்கு | | நீயும் குருசிலை அல்லை மாதோ | | நின் வெங் காதலி தன் மனைப் புலம்பி, | | ஈர் இதழ் உண்கண் உகுத்த | 5 | பூசல் கேட்டும் அருளாதோயே! | |
| தலைமகட்குத் தூதாய்ப் பாசறைக்கண் சென்ற பாணன் தலைமகனை நெருங்கிச் சொல்லியது. 10 | | |
481 | | சாய் இறைப் பணைத் தோள், அவ் வரி அல்குல், | | சேயிழை மாதரை உள்ளி, நோய் விட | | முள் இட்டு ஊர்மதி, வலவ! நின் | | புள் இயல் கலி மாப் பூண்ட தேரே. | 5 | வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகற்குக் கூறியது. | |
| இனி வருகின்ற பாட்டு ஒன்பதிற்கும் இஃது ஒக்கும். | | |
482 | | தெரிஇழை அரிவைக்குப் பெரு விருந்து ஆக | | வல்விரைந்து கடவுமதி பாக! வெள் வேல் | | வென்று அடு தானை வேந்தனொடு | |
| நாள் இடைச் சேப்பின், ஊழியின் நெடிதே! 2 | | |
483 | | ஆறு வனப்பு எய்த அலர் தாயினவே; | | வேந்து விட்டனனே; மா விரைந்தனவே; | | முன்னுறக் கடவுமதி, பாக! | |
| நல் நுதல் அரிவை தன் நலம்பெறவே. 3 | | |
484 | | வேனில் நீங்கக் கார் மழை தலைஇ, | | காடு கவின் கொண்டன்று பொழுது; பாடு சிறந்து | | கடிய கடவுமதி, பாக! | |
| நெடிய நீடினம், நேரிழை மறந்தே. 4 | | |
485 | | அரும் படர் அவலம் அவளும் தீர, | | பெருந் தோள் நலம்வர யாமும் முயங்க, | | ஏமதி, வலவ! தேரே | |
| மா மருண்டு உகளும் மலர் அணிப் புறவே. 5 | | |
486 | | பெரும் புன் மாலை ஆனாது நினைஇ, | | அரும் படர் உழத்தல் யாவது? என்றும் | | புல்லி ஆற்றாப் புரையோள் காண | | வள்பு தெரிந்து ஊர்மதி, வலவ! நின் | |
| புள் இயல் கலி மாப் பூண்ட தேரே. 6 | | |
487 | | இது மன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே; | | செறிதொடி உள்ளம் உவப்ப | |
|
488 | | கருவி வானம் பெயல் தொடங்கின்றே; | | பெரு விறல் காதலி கருதும் பொழுதே; | | விரி உளை நன் மாப் பூட்டி, | |
| பருவரல் தீர, கடவுமதி தேரே! 8 | | |
489 | | அஞ்சிறை வண்டின் அரியினம் மொய்ப்ப, | | மென் புல முல்லை மலரும் மாலை, | | பையுள் நெஞ்சின் தையல் உவப்ப, | | நுண் புரி வண் கயிறு இயக்கி, நின் | |
| வண் பரி நெடுந் தேர் கடவுமதி, விரைந்தே. 9 | | |
490 | | அம் தீம் கிளவி தான் தர, எம் வயின் | | வந்தன்று | | ..................................................................................................... | |
| ஆய் மணி நெடுந் தேர் கடவுமதி, விரைந்தே. 10 | | |
491 | | கார் அதிர் காலை யாம் ஓ இன்று நலிய, | | நொந்து நொந்து உயவும் உள்ளமொடு | | வந்தனெம் மடந்தை! நின் ஏர் தர விரைந்தே. | |
| வினை முற்றிப் புகுந்த தலைமகன் தலைவிக்குச் சொல்லியது. 1 | | |
492 | | நின்னே போலும் மஞ்ஞை ஆல, நின் | | நல் நுதல் நாறும் முல்லை மலர, | | நின்னே போல மா மருண்டு நோக்க, | | நின்னே உள்ளி வந்தனென் | 5 | நல் நுதல் அரிவை! காரினும் விரைந்தே. | |
|
493 | | ஏறு முரண் சிறப்ப, ஏறு எதிர் இரங்க, | | மாதர் மான் பிணை மறியொடு மறுக, | | கார் தொடங்கின்றே காலை | | நேர் இறை முன்கை! நின் உள்ளி யாம் வரவே. | |
|
494 | | வண்டு தாது ஊத, தேரை தெவிட்ட, | | தண் கமழ் புறவின் முல்லை மலர, | | இன்புறுத்தன்று பொழுதே; | | நின் குறி வாய்த்தனம்; தீர்க, இனிப் படரே! | |
|
495 | | செந் நில மருங்கில் பல் மலர் தாஅய், | | புலம்பு தீர்ந்து, இனியஆயின, புறவே | | பின் இருங் கூந்தல் நல் நலம் புனைய, | | உள்ளுதொறும் கலிழும் நெஞ்சமொடு, | 5 | முள் எயிற்று அரிவை! யாம் வந்தமாறே. | |
|
496 | | மா புதல் சேர, வரகு இணர் சிறப்ப | | மா மலை புலம்ப, கார் கலித்து அலைப்ப, | | பேர் அமர்க் கண்ணி! நிற் பிரிந்து உறைநர் | | தோள் துணையாக வந்தனர்; | 5 | போது அவிழ் கூந்தலும் பூ விரும்புகவே. | |
| குறித்த பருவத்தின்கண் தலைமகன் வந்துழி, தோழி தலைமகட்குச் சொல்லியது. 6 | | |
497 | | குறும் பல் கோதை கொன்றை மலர, | | நெடுஞ் செம் புற்றம் ஈயல் பகர, | | மா பசி மறுப்ப, கார் தொடங்கின்றே | | பேர் இயல் அரிவை! நின் உள்ளிப் | 5 | போர் வெங் குருசில் வந்தமாறே. | |
|
498 | | தோள் கவின் எய்தின; தொடி நிலை நின்றன; | | நீள் வரி நெடுங் கண் வாள் வனப்பு உற்றன | | ஏந்து கோட்டு யானை வேந்து தொழில் விட்டென, | | விரை செலல் நெடுந் தேர் கடைஇ, | 5 | வரையக நாடன் வந்தமாறே. | |
|
499 | | பிடவம் மலர, தளவம் நனைய, | | கார் கவின் கொண்ட கானம் காணின், | | 'வருந்துவள் பெரிது' என, அருந் தொழிற்கு அகலாது, | | வந்தனரால், நம் காதலர் | 5 | அம் தீம் கிளவி! நின் ஆய் நலம் கொண்டே. | |
|
500 | | கொன்றைப் பூவின் பசந்த உண்கண், | | குன்றக நெடுஞ் சுனைக் குவளை போல, | | தொல் கவின் பெற்றன இவட்கே வெல் போர் | | வியல் நெடும் பாசறை நீடிய | 5 | வய மான் தோன்றல் நீ! வந்தமாறே. | |
|
|