தொடக்கம் முகப்பு
முல்லை
 
401
மறி இடைப்படுத்த மான் பிணை போல,
புதல்வன் நடுவணன் ஆக, நன்றும்
இனிது மன்ற அவர் கிடக்கை; முனிவு இன்றி
நீல் நிற வியலகம் கவைஇய
5
ஈனும், உம்பரும், பெறலருங்குரைத்தே.
கடிமனைச் சென்றுவந்த செவிலி உவந்த உள்ளத்தளாய் நற்றாய்க்குச் சொல்லியது.
 

 
402
புதல்வற் கவைஇய தாய் புறம் முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை, பாணர்
நரம்பு உளர் முரற்கை போல,
இனிதால்; அம்ம! பண்புமார் உடைத்தே. 2
 

 
403
புணர்ந்த காதலியின் புதல்வன் தலையும்
அமர்ந்த உள்ளம் பெரிது ஆகின்றே
அகன் பெருஞ் சிறப்பின் தந்தை பெயரன்
முறுவலின் இன் நகை பயிற்றி,
சிறு தேர் உருட்டும் தளர்நடை கண்டே. 3
 

 
404
வாள் நுதல் அரிவை மகன் முலை ஊட்ட,
தான் அவள் சிறுபுறம் கவையினன் நன்றும்
நறும் பூந் தண் புறவு அணிந்த,
குறும் பல் பொறைய நாடுகிழவோனே. 4
 

 
405
ஒண் சுடர்ப் பாண்டில் செஞ் சுடர் போல,
மனைக்கு விளக்கு ஆயினள் மன்ற கனைப் பெயல்
பூப் பல அணிந்த வைப்பின்
புறவு அணி நாடன் புதல்வன் தாயே. 5
 

 
406
மாதர் உண்கண் மகன் விளையாட,
காதலித் தழீஇ இனிது இருந்தனனே
தாது ஆர் பிரசம் ஊதும்
போது ஆர் புறவின் நாடு கிழவோனே. 6
 

 
407
நயந்த காதலித் தழீஇ, பாணர்
நயம் படு முரற்கையின் யாத்த பயன் தெரிந்து,
இன்புறு புணர்ச்சி நுகரும்
மென் புல வைப்பின் நாடு கிழவோனே. 7
 

 
408
பாணர் முல்லை பாட, சுடர் இழை
வாள் நுதல் அரிவை முல்லை மலைய,
இனிது இருந்தனனே, நெடுந்தகை
துனி தீர் கொள்கைத் தன் புதல்வனொடு பொலிந்தே. 8
 

 
409
புதல்வற் கவைஇயினன் தந்தை; மென் மொழிப்
புதல்வன் தாயோ இருவரும் கவைஇயினள் ;
இனிது மன்ற அவர் கிடக்கை;
நனி இரும் பரப்பின் இவ் உலகுடன் உறுமே. 9
 

 
410
மாலை முன்றில் குறுங்கால் கட்டில்
மனையோள் துணைவி ஆக, புதல்வன்
மார்பின் ஊரும் மகிழ்நகை இன்பப்
பொழுதிற்கு ஒத்தன்று மன்னே.
5
மென் பிணித்து அம்ம பாணனது யாழே!
கடிமனைச் சென்ற செவிலி, தலைமகனும் தலைமகளும் புதல்வனொடு பாடல் கேட்டிருந்தமை கண்டு, தன்னுள்ளே உவந்து சொல்லியது. 10
 

 
411
ஆர் குரல் எழிலி அழிதுளி சிதறிக்
கார் தொடங்கின்றால், காமர் புறவே;
வீழ்தரு புதுப்புனல் ஆடுகம்
தாழ் இருங் கூந்தல்! வம்மதி, விரைந்தே.
பருவம் குறித்துப் பிரிந்த தலைமகன் அப் பருவத்திற்கு முன்னே வந்து, தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழிப் பருவம் வந்ததாக, தான் பருவத்திற்கு முன்னே வந்தமை தோன்றக் கூறுவான் தலைவிக்கு  த்தது. 1
 

 
412
காயா, கொன்றை, நெய்தல், முல்லை,
போது அவிழ் தளவமொடு பிடவு, அலர்ந்து கவினிப்
பூ அணி கொண்டன்றால் புறவே
பேர் அமர்க்கண்ணி! ஆடுகம், விரைந்தே.
இதுவும் அது. 2
 

 
413
நின் நுதல் நாறும் நறுந் தண் புறவில்
நின்னே போல மஞ்ஞை ஆல,
கார் தொடங்கின்றால் பொழுதே
பேர் இயல் அரிவை! நாம் நயத்தகவே.
இதுவும் அது. 3
 

 
414
புள்ளும் மாவும் புணர்ந்து இனிது உகள,
கோட்டவும் கொடியவும் பூப் பல பழுனி
மெல் இயல் அரிவை! கண்டிகும்
மல்லல் ஆகிய மணம் கமழ் புறவே.
இதுவும் அது. 4
 

 
415
இதுவே, மடந்தை! நாம் மேவிய பொழுதே;
உதுவே, மடந்தை! நாம் உள்ளிய புறவே;
இனிது உடன் கழிக்கின், இளமை
இனிதால் அம்ம, இனியவர்ப் புணர்வே!
இதுவும் அது. 5
 

 
416
போது ஆர் நறுந் துகள் கவினிப் புறவில்,
தாது ஆர்ந்து,
களிச் சுரும்பு அரற்றும் காமர் புதலின்,
மடப் பிடி தழீஇய, மாவே;
5
சுடர்த் தொடி மடவரல் புணர்ந்தனம், யாமே!
பருவம் குறித்துப் பிரிந்த தலைமகன் பருவத்திற்கு முன்னே வந்து தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழி, அதற்கு இனியனாய்த் தன்னுள்ளே சொல்லுவான் போன்று, தலைவி அறியுமாற்றால் கூறியது. 6
 

 
417
கார் கலந்தன்றால் புறவே; பல உடன்
ஏர் பரந்தனவால் புனமே; ஏர் கலந்து
தாது ஆர் பிரசம் மொய்ப்ப,
போது ஆர் கூந்தல் முயங்கினள், எம்மே.
இதுவும் அது. 7
 

 
418
வானம்பாடி வறம் களைந்து, ஆனாது
அழி துளி தலைஇய புறவில், காண்வர
வானர மகளோ நீயே
மாண் முலை அடைய முயங்கியோயே?
குறித்த பருவத்திற்கு உதவ வாராநின்ற வழிக்கண் உருவு வெளிப்பாடு கண்ட தலைமகன் இல்லத்துப் புகுந்துழி, தலைமகட்குச் சொல்லியது. 8
 

 
419
உயிர் கலந்து ஒன்றிய செயிர் தீர் கேண்மைப்
பிரிந்துறல் அறியா, விருந்து கவவி,
நம் போல் நயவரப் புணர்ந்தன
கண்டிகும் மடவரல்! புறவின் மாவே.
இன்ப நுகர்ச்சிக்கு ஏற்ற பருவம் வந்துழி, தலைமகளொடு புறவில் சென்ற தலைமகன் அவ்விடத்து மாக்களை அவட்குக் காட்டிச் சொல்லியது. 9
 

 
420
பொன் என மலர்ந்த, கொன்றை; மணி எனத்
தேம் படு காயா மலர்ந்த; தோன்றியொடு
நன்னலம் எய்தினை, புறவே! நின்னைக்
காணிய வருதும், யாமே
5
வாள் நுதல் அரிவையொடு ஆய் நலம் படர்ந்தே.
குறித்த பருவத்து எய்திய, அணித்தாக வந்த தலைமகன் பருவத்தால் அணிகொண்ட புறவை நோக்கிச் சொல்லியது. 10
 

 
421
மாலை வெண் காழ் காவலர் வீச,
நறும் பூம் புறவின் ஒடுங்கு முயல் இரியும்
புன்புல நாடன் மட மகள்
நலம் கிளர் பணைத் தோள் விலங்கின, செலவே.
வினை பலவற்றிற்கும் பிரிந்து ஒழுகும் தலைமகன் பின்பு மனைவயின் நீங்காது ஒழுகுகின்ற காதல் உணர்ந்தோர் சொல்லியது. 1
 

 
422
கடும் பரி நெடுந் தேர்க் கால் வல் புரவி,
நெடுங் கொடி முல்லையொடு தளவமலர் உதிர,
விரையுபு கடைஇ நாம் செல்லின்,
நிரை வளை முன்கை வருந்தலோ இலளே.
மீள்கின்றான் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது. 2
 

 
423
மா மழை இடியூஉத் தளி சொரிந்தன்றே;
வாள் நுதல் பசப்பச் செலவு அயர்ந்தனையே;
யாமே நிற் துறந்து அமையலம்;
ஆய் மலர் உண்கணும் நீர் நிறைந்தனவே.
கார்ப் பருவத்தே பிரியக் கருதிய தலைமகற்குத் தோழி தலைமகளது ஆற்றாமை கூறிச் செலவு அழுங்குவித்தது. 3
 

 
424
புறவு அணி நாடன் காதல் மட மகள்
ஒள் நுதல் பசப்ப நீ செலின், தெண் நீர்ப்
போது அவிழ் தாமரை அன்ன நின்
காதல்அம் புதல்வன் அழும், இனி முலைக்கே.
இதுவும் அது. 4
 

 
425
புன் புறப் பேடை சேவல் இன்புற
மன்னர் இயவரின் இரங்கும் கானம்
வல்லை நெடுந் தேர் கடவின்,
அல்லல் அரு நோய் ஒழித்தல் எமக்கு எளிதே.
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. 5
 

 
426
வென் வேல் வேந்தன் அருந் தொழில் துறந்து, இனி,
நன்னுதல்! யானே செலவு ஒழிந்தனெனே!
முரசு பாடு அதிர ஏவி,
அரசு படக் கடக்கும் அருஞ் சமத்தானே.
வேந்தற்குத் தானைத்தலைவனாய் ஒழுகும் தலைமகன் பிரிந்து வினை முடித்து வந்து தலைவியோடு உறைகின்றுழி, 'இன்னும் பிரியுங்கொல்?' என்று கருதிய தலைமகட்குக் கவற்சி தீரச் சொல்லியது. 6
 

 
427
பேர் அமர் மலர்க் கண் மடந்தை! நீயே
கார் எதிர் பொழுது என விடல் ஒல்லாயே;
போருடை வேந்தன், 'பாசறை
வாரான் அவன்' எனச் செலவு அழுங்கினனே.
'பிரியுங்கொல்?' என்று ஐயுற்று உடன்படாமை மேற்கொண்டு ஒழுகுகின்ற தலைமகட்குத் தான் பிரிவொழிந்ததற்குக் காரணம் கூறித் தேற்றியது. 7
 

 
428
தேர் செலவு அழுங்க, திருவில் கோலி,
ஆர் கலி எழிலி சோர் தொடங்கின்றே;
வேந்து விடு விழுத் தொழில் ஒழிய,
யான் தொடங்கினனால், நிற் புறந்தரவே.
'பிரியுங்கொல்?' என்று ஐயுற்ற தலைமகள் ஐயம் தீரத் தலைமகன் சொல்லியது. 8
 

 
429
பல் இருங் கூந்தல்! பசப்பு நீ விடின்,
செல்வேம் தில்ல யாமே செற்றார்
வெல் கொடி அரணம் முருக்கிய
கல்லா யானை வேந்து பகை வெலற்கே.
குறிப்பினால் பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைமகள் உடம்படுவாளாக, வேந்தற்கு உற்றுழிப் பிரியும் தலைமகன் சொல்லியது. 9
 

 
430
நெடும் பொறை மிசைய குறுங் கால் கொன்றை
அடர் பொன் என்னச் சுடர் இதழ் பகரும்
கான் கெழு நாடன் மகளே!
அழுதல் ஆன்றிசின்; அழுங்குவல் செலவே.
'பிரியுங்கொல்?' என்று ஆற்றாளாகிய தலைமகட்குத் தலைமகன் பருவ வரவு கூறி, 'இது காரணத்தாலும் பிரியேன்' எனச் சொல்லியது. 10
 

 
431
நன்றே, காதலர் சென்ற ஆறே!
அணி நிற இரும் பொறை மீமிசை
மணி நிற உருவின தோகையும் உடைத்தே.
'பிரிவு உடம்பட்டும் ஆற்றாயாகின்றது என்னை?' என்று வினவியவழி, 'அவர் போன சுரம் போகற்கு அரிது என்று ஆற்றேனாகின்றேன்' என்ற தலைமகட்கு, 'வேனிற்காலம் கழிந்தது; கார்ப்பருவத் தோற்றத்திலே பிரிந்தாராகலான், அச் சுரம் நன்று'
இனி வருகின்ற பாட்டு ஒன்பதிற்கும் இஃது ஒக்கும்.
 

 
432
நன்றே, காதலர் சென்ற ஆறே!
சுடு பொன் அன்ன கொன்றை சூடி,
கடி புகுவனர்போல் மள்ளரும் உடைத்தே. 2
 

 
433
நன்றே, காதலர் சென்ற ஆறே!
நீர்ப்பட எழிலி வீசும்
கார்ப் பெயற்கு எதிரிய கானமும் உடைத்தே. 3
 

 
434
நன்றே, காதலர் சென்ற ஆறே!
மறியுடை மான்பிணை உகள,
தண் பெயல் பொழிந்த இன்பமும் உடைத்தே. 4
 

 
435
நன்றே, காதலர் சென்ற ஆறே!
நிலன் அணி நெய்தல் மலர,
பொலன் அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே. 5
 

 
436
நன்றே, காதலர் சென்ற ஆறே!
நன் பொன் அன்ன சுடர் இணர்க்
கொன்றையொடு மலர்ந்த குருந்துமார் உடைத்தே. 6
 

 
437
நன்றே, காதலர் சென்ற ஆறே!
ஆலித் தண் மழை தலைஇய,
வாலிய மலர்ந்த முல்லையும் உடைத்தே. 7
 

 
438
நன்றே, காதலர் சென்ற ஆறே!
பைம் புதல் பல் பூ மலர,
இன்புறத் தகுந பண்புமார் உடைத்தே. 8
 

 
439
நன்றே, காதலர் சென்ற ஆறே!
குருந்தங் கண்ணிக் கோவலர்
பெருந் தண் நிலைய பாக்கமும் உடைத்தே. 9
 

 
440
நன்றே, காதலர் சென்ற ஆறே!
தண் பெயல் அளித்த பொழுதின்
ஒண் சுடர்த் தோன்றியும் தளவமும் உடைத்தே. 10
 

 
441
ஐய ஆயின, செய்யோள் கிளவி;
கார் நாள் உருமொடு கையறப் பிரிந்தென,
நோய் நன்கு செய்தன எமக்கே;
யாம் உறு துயரம் அவள் அறியினோ நன்றே.
சென்ற வினை முடியாமையின், கார்காலம் வந்த இடத்து, மீளப் பெறாத தலைமகன்,தலைமகள் உழைநின்றும் வந்த தூதர் வார்த்தை கேட்டு, இரங்கியது. 1
 

 
442
பெருஞ் சின வேந்தன் அருந் தொழில் தணியின்,
விருந்து நனி பெறுதலும் உரியள்மாதோ
இருண்டு தோன்று விசும்பின் உயர்நிலை உலகத்து
அருந்ததி அனைய கற்பின்,
5
குரும்பை மணிப் பூண் புதல்வன் தாயே.
வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் வினை முடியாமையின், பாசறைக்கண் இருந்து பருவ வரவின்கண் சொல்லியது. 2
 

 
443
நனி சேய்த்து என்னாது, நற்றேர் ஏறிச் சென்று,
இலங்கு நிலவின் இளம் பிறை போலக்
காண்குவெம் தில்ல, அவள் கவின் பெறு சுடர் நுதல்
விண் உயர் அரண் பல வௌவிய
5
மண்ணுறு முரசின் வேந்து தொழில் விடினே.
இதுவும் அது. 3
 

 
444
பெருந் தோள் மடவரல் காண்குவெம் தில்ல
நீள் மதில் அரணம் பாய்ந்தெனத் தொடி பிளந்து
வைந் நுதி மழுகிய தடங் கோட்டு யானை,
வென் வேல், வேந்தன் பகை தணிந்து,
5
இன்னும் தன் நாட்டு முன்னுதல் பெறினே.
இதுவும் அது. 4
 

 
445
புகழ் சால் சிறப்பின் காதலி புலம்பத்
துறந்து வந்தனையே, அரு தொழில் கட்டூர்
நல் ஏறு தழீஇ நாகு பெயர் காலை
உள்ளுதொறும் கலிழும் நெஞ்சம்!
5
வல்லே எம்மையும் வர இழைத்தனையே!
பாசறைக்கண் இருந்த தலைமகன் பருவ வரவின்கண் தலைமகளை நினைந்து, நெஞ்சொடு புலந்து சொல்லியது. 5
 

 
446
முல்லை நாறும் கூந்தல் கமழ் கொள
நல்ல காண்குவம், மாஅயோயே!
பாசறை அருந் தொழில் உதவி, நம்
காதல் நல் நாட்டுப் போதரும் பொழுதே.
பாசறைக்கண் இருந்த தலைமகன் பருவ வரவின்கண் உருவு வெளிப்பாடு கண்டு சொல்லியது. 6
 

 
447
பிணி வீடு பெறுக, மன்னவன் தொழிலே!
பனி வளர் தளவின் சிரல் வாய்ச் செம் முகை,
ஆடு சிறை வண்டு அவிழ்ப்ப,
பாடு சான்ற; காண்கம், வாணுதலே!
வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் அவண் வினைமுற்றி மீளும் வேட்கையனாய், பருவ வரவின்கண் தலைமகளை நினைத்துச் சொல்லியது. 7
 

 
448
தழங்குரல் முரசம் காலை இயம்ப,
கடுஞ் சின வேந்தன் தொழில் எதிர்ந்தனனே;
மெல் அவல் மருங்கின் முல்லை பூப்பப்
பொங்கு பெயல் கனை துளி கார் எதிர்ந்தன்றே;
5
அம் சில் ஓதியை உள்ளுதொறும்,
துஞ்சாது அலமரல் நாம் எதிர்ந்தனமே.
வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் பருவம் வந்த இடத்தினும் மீளப் பெறாது, அரசன் செய்தியும், பருவத்தின் செய்தியும், தன் செய்தியும், கூறி ஆற்றானாயது. 8
 

 
449
முரம்பு கண் உடையத் திரியும் திகிரியொடு
பணை நிலை முணைஇய வயமாப் புணர்ந்து,
திண்ணிதின் மாண்டன்று தேரே;
ஒண்ணுதல் காண்குவம், வேந்து வினை விடினே.
பாசறைக்கண் வேந்தனொடு வினைப் பொருட்டால் போந்திருந்த தலைமகன் அவ் வேந்தன் மாற்று வேந்தர் தரு திறைகொண்டு மீள்வானாகப் பொருந்துழி, தானும் மீட்சிக்குத் தேர் சமைத்த எல்லைக்கண்ணே, அவ் அரசன், பொருத்தம் தவிர்ந்து மீண்
 

 
450
முரசு மாறு இரட்டும் அருந் தொழில் பகை தணிந்து
நாடு முன்னியரோ பீடு கெழு வேந்தன்;
வெய்ய உயிர்க்கும் நோய் தணிய,
செய்யோள் இளமுலைப் படீஇயர், என் கண்ணே!
வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் வினை முற்றாமையின், பாசறைக்கண் இருந்து, தன் மனக்கருத்து  த்தது. 10
 

 
451
கார் செய் காலையொடு கையறப் பிரிந்தோர்
தேர் தரு விருந்தின் தவிர்குதல் யாவது?
மாற்று அருந் தானை நோக்கி,
ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே!
வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் குறித்த பருவம் நினைந்து ஆற்றி இருந்த தலைமகள், அப் பருவ வரவின்கண் பாசறையினின்றும் வந்தார் அரசன் செய்தி கூறக் கேட்டு, ஆற்றாளாய்ச் சொல்லியது. 1
 

 
452
வறந்த ஞாலம் தெளிர்ப்ப வீசிக்
கறங்கு குரல் எழிலி கார் செய்தன்றே;
பகை வெங் காதலர் திறை தரு முயற்சி
மென் தோள் ஆய்கவின் மறைய,
5
பொன் புனை பீரத்து அலர் செய்தன்றே.
குறித்த பருவத்து வாராது தலைமகன் பகைமேல் முயல்கின்ற முயற்சி கேட்ட தலைமகள் கூறியது. 2
 

 
453
அவல்தொறும் தேரை தெவிட்ட, மிசைதொறும்
வெங் குரல் புள்ளினம் ஒலிப்ப, உதுக்காண்,
கார் தொடங்கின்றால் காலை; அதனால்,
நீர் தொடங்கினவால் நெடுங் கண்; அவர்
5
தேர் தொடங்கு இன்றால் நம்வயினானே.
பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 3
 

 
454
தளவின் பைங் கொடி தழீஇ, பையென
நிலவின் அன்ன நேர் அரும்பு பேணி,
கார் நயந்து எய்தும், முல்லை; அவர்
தேர் நயந்து உறையும், என் மாமைக் கவினே.
பருவ வரவின்கண் தலைமகள் ஆற்றாளாய்த் தோழிக்குச் சொல்லியது. 4
 

 
455
அரசு பகை தணிய, முரசு படச் சினைஇ,
ஆர் குரல் எழிலி கார் தொடங்கின்றே:
அளியவோ அளிய தாமே ஒளி பசந்து,
மின் இழை ஞெகிழச் சாஅய்,
5
தொல் நலம் இழந்த என் தட மென் தோளே!
ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 5
 

 
456
உள்ளார்கொல்லோ தோழி! வெள் இதழ்ப்
பகல் மதி உருவின் பகன்றை மா மலர்
வெண் கொடி ஈங்கைப் பைம் புதல் அணியும்
அரும் பனி அளைஇய கூதிர்
5
ஒருங்கு இவண் உறைதல், தெளித்து அகன்றோரே?
குறித்த பருவம் வரவும் தலைமகன் வந்திலனாக ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 6
 

 
457
பெய் பனி நலிய, உய்தல் செல்லாது
குருகினம் நரலும் பிரிவு அருங் காலை,
துறந்து அமைகல்லார், காதலர்;
மறந்து அமைகல்லாது, என் மடம் கெழு நெஞ்சே.
பருவ வரவின் கண் ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 7
 

 
458
துணர்க் காய்க் கொன்றை குழற் பழம் ஊழ்த்தன;
அதிர் பெயற்கு எதிரிய சிதர் கொள் தண் மலர்
பாணர் பெருமகன் பிரிந்தென,
மாண் நலம் இழந்த என் கண் போன்றனவே!
பருவங் குறித்துப் பிரிந்த தலைமகன் வரவு பார்த்திருந்த தலைமகள் பருவ முதிர்ச்சி கூறி, ஆற்றாளாய்  த்தது. 8
 

 
459
மெல் இறைப் பணைத் தோள் பசலை தீர,
புல்லவும் இயைவது கொல்லோ புல்லார்
ஆர் அரண் கடந்த சீர் கெழு தானை
வெல் போர் வேந்தனொடு சென்ற
5
நல் வயல் ஊரன் நறுந் தண் மார்பே?
'வேந்தன் வினை முற்றினான்; நின் காதலர் கடுக வருவர்' எனக் கேட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 9
 

 
460
பெருஞ் சின வேந்தனும் பாசறை முனியான்;
இருங் கலி வெற்பன் தூதும் தோன்றா;
ததை இலை வாழை முழுமுதல் அசைய,
இன்னா வாடையும் அலைக்கும்;
5
என் ஆகுவென்கொல், அளியென் யானே?
வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகனைப் பருவ முதிர்ச்சியினும் வரக் காணாது, தலைமகள் சொல்லியது. 10
 

 
461
வான் பிசிர்க் கருவியின் பிடவு முகை தகைய,
கான் பிசிர் கற்ப, கார் தொடங்கின்றே;
இனையல் வாழி, தோழி; எனையதூஉம்
நிற் துறந்து அமைகுவர்அல்லர்,
5
வெற்றி வேந்தன் பாசறையோரே.
பிரிவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி வரவு கூறி, ' த்த பருவம் வந்ததாகலான், அவர் வருவர்; என வற்புறீஇயது. 1
 

 
462
ஏதில பெய்ம் மழை கார் என மயங்கிய
பேதைஅம் கொன்றைக் கோதை நிலை நோக்கி,
எவன் இனி, மடந்தை! நின் கலிழ்வே? நின்வயின்
தகை எழில் வாட்டுநர் அல்லர்,
5
முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரே.
பருவங் கண்டு வேறுபட்ட கிழத்தியைத் தோழி, 'பருவம் அன்று' என வற்புறீஇயது. 2
 

 
463
புதல்மிசை நறு மலர் கவின் பெறத் தொடரி, நின்
நலம் மிகு கூந்தல் தகை கொளப் புனைய
வாராது அமையலோ இலரே; நேரார்
நாடு படு நன்கலம் தரீஇயர்,
5
நீடினர் தோழி! நம் காதலோரே.
குறித்த பருவம் வரவும் தலைமகன் தாழ்த்துழி, தோழி காரணம் கூறி, வற்புறீஇயது. 3
 

 
464
கண் எனக் கருவிளை மலர, பொன் என
இவர் கொடிப் பீரம் இரும் புதல் மலரும்
அற்சிரம் மறக்குநர் அல்லர் நின்
நல் தோள் மருவரற்கு உலமருவோரே.
வரைந்த அணுமைக்கண்ணே பிரிந்த தலைமகன் குறித்த பருவம் வந்துழி, 'இதனை மறந்தார்' என்ற தலைமகட்குத் தோழி, 'வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாகலான் மறத்தல் கூடாது' எனச் சொல்லி வற்புறீஇயது. 4
 

 
465
நீர் இகுவன்ன நிமிர் பரி நெடுந் தேர்,
கார் செய் கானம் கவின் பட, கடைஇ,
மயங்கு மலர் அகலம் நீ இனிது முயங்க,
வருவர், வாழி, தோழி!
5
செரு வெங் குருசில் தணிந்தனன் பகையே.
பருவம் கண்டு வேறுபட்ட தலைமகளை, 'வேந்தன் வினைமுடித்தான்' எனக் கேட்ட தோழி, 'வருவர்' என வற்புறீஇயது. 5
 

 
466
வேந்து விடு விழுத் தொழில் எய்தி, ஏந்து கோட்டு
அண்ணல் யானை அரசு விடுத்து, இனியே
எண்ணிய நாளகம் வருதல் பெண் இயல்
காமர் சுடர் நுதல் விளங்கும்
5
தே மொழி அரிவை! தெளிந்திசின் யானே.
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகளை, 'அவர் போன காரியம் இடையூறு இன்றி முடிந்து வருதல் பல்லாற்றானும் தெளிந்தேன்' எனத் தோழி சொல்லி ஆற்றுவித்தது. 6
 

 
467
புனை இழை நெகிழச் சாஅய், நொந்துநொந்து
இனையல் வாழியோ இகுளை! 'வினைவயின்
சென்றோர் நீடினர் பெரிது' என: தங்காது
நம்மினும் விரையும் என்ப,
5
வெம் முரண் யானை விறல் போர் வேந்தே.
தலைமகன் வினைவயிற் பிரிய ஆற்றாள் ஆகிய தலைமகளைத் தோழி வற்புறீஇயது. 7
 

 
468
வரி நுணல் கறங்க, தேரை தெவிட்ட,
கார் தொடங்கின்றே காலை; இனி, நின்
நேர் இறைப் பணைத் தோட்கு ஆர் விருந்து ஆக,
வடி மணி நெடுந் தேர் கடைஇ,
5
வருவர் இன்று, நம் காதலோரே.
பிரிவு நீட ஆற்றாள் ஆய தலைமகட்குத் தோழி பருவங்காட்டி, 'இன்றே வருவர்' என வற்புறீஇயது. 8
 

 
469
பைந் தினை உணங்கல் செம் பூழ் கவரும்
வன்புல நாடன் தரீஇய, வலன் ஏர்பு
அம் கண் இரு விசும்பு அதிர, ஏறொடு
பெயல் தொடங்கின்றே வானம்;
5
காண்குவம்; வம்மோ, பூங் கணோயே!
பிரிவு நீட ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி 'அவரை நமக்குத் தருதற்கு வந்தது காண் இப் பருவம்' எனக் காட்டி வற்புறீஇயது. 9
 

 
470
இரு நிலம் குளிர்ப்ப வீசி, அல்கலும்
அரும் பனி அளைஇய அற்சிரக் காலை
உள்ளார், காதலர், ஆயின், ஒள்ளிழை!
சிறப்பொடு விளங்கிய காட்சி
5
மறக்க விடுமோ, நின் மாமைக் கவினே?
பருவம் வந்தது கண்டு, 'தாம் குறித்த இதனை மறந்தார்' என வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. 10
 

 
471
எல் வளை நெகிழ, மேனி வாட,
பல் இதழ் உண்கண் பனி அலைக் கலங்க,
துறந்தோன் மன்ற, மறம் கெழு குருசில்;
அது மற்று உணர்ந்தனை போலாய்
5
இன்னும் வருதி; என் அவர் தகவே?
பருவ வரவின்கண் தூதாகி வந்த பாணன் கூறிய வழி, தோழி சொல்லியது. 1
 

 
472
கை வல் சீறியாழ்ப் பாண! நுமரே
செய்த பருவம் வந்து நின்றதுவே;
எம்மின் உணரார்ஆயினும், தம்வயின்
பொய் படு கிளவி நாணலும்
5
எய்யார் ஆகுதல், நோகோ யானே?
குறித்த பருவம் வரவும் தலைமகன் வாரானாகியவழி, தூதாய் வந்த பாணற்குத் தோழி கூறியது. 2
 

 
473
பலர் புகழ் சிறப்பின் நும் குருசில் உள்ளிச்
செலவு நீ நயந்தனைஆயின், மன்ற
இன்னா அரும் படர் எம்வயின் செய்த
பொய் வலாளர் போல
5
கை வல் பாண! எம் மறவாதீமே.
'தலைமகன் பிரிந்த நாட்டில் செல்வேம்' என்ற அவன் பாணற்குத் தலைமகள் சொல்லியது. 3
 

 
474
மை அறு சுடர் நுதல் விளங்க, கறுத்தோர்
செய் அரண் சிதைத்த செரு மிகு தானையொடு
கதழ் பரி நெடுந் தேர் அதர் படக் கடைஇச்
சென்றவர்த் தருகுவல் என்னும்;
5
நன்றால் அம்ம, பாணனது அறிவே!
பிரிவின்கண் ஆற்றாமை கண்டு, 'தூதாகிச் சென்று அவனைக் கொணர்வல்' என்ற பாணன் கேட்பத் தலைமகள் கூறியது. 4
 

 
475
தொடி நிலை கலங்க வாடிய தோளும்
வடி நலன் இழந்த என் கண்ணும் நோக்கி,
பெரிது புலம்பினனே, சீறியாழ்ப் பாணன்;
எம் வெங் காதலொடு பிரிந்தோர்
5
தம்மோன் போலான்; பேர் அன்பினனே.
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தலைமகனுழை நின்று வந்தார் கேட்ப, தன் மெலிவு கண்டு இரங்கிய பாணனைத் தோழிக்கு மகிழ்ந்து சொல்லியது. 5
 

 
476
கருவி வானம் கார் சிறந்து ஆர்ப்ப,
பருவம் செய்தன பைங் கொடி முல்லை;
பல் ஆன் கோவலர் படலைக் கூட்டும்
அன்பு இல் மாலையும் உடைத்தோ
5
அன்பு இல் பாண! அவர் சென்ற நாடே?
'பிரிவாற்றாமை அவற்கும் உளதன்றே; நீ வேறுபடுகின்றது என்னை?' என்ற பாணற்குத் தலைமகள் கூறியது. 6
 

 
477
பனி மலர் நெடுங் கண் பசலை பாய,
துனி மலி துயரமொடு அரும் படர் உழப்போள்
கையறு நெஞ்சிற்கு உயவுத் துணை ஆக,
சிறு வரைத் தங்குவைஆயின்,
5
காண்குவை மன்னால் பாண! எம் தேரே.
தலைமகள்மாட்டுப் பாணனைத் தூதாக விடுத்த தலைமகன் கூறியது. 7
 

 
478
'நீடினம்' என்று கொடுமை தூற்றி,
வாடிய நுதலள் ஆகி, பிறிது நினைந்து,
யாம் வெங் காதலி நோய் மிகச் சாஅய்,
சொல்லியது  மதி, நீயே
5
முல்லை நல் யாழ்ப் பாண! மற்று எமக்கே?
பிரிந்து உறையும் தலைமகன் தலைமகள் விட்ட தூதாய்ச் சென்ற பாணனை, 'அவள் சொல்லிய திறம் கூறு' எனக் கேட்டது. 8
 

 
479
சொல்லுமதி பாண! சொல்லுதோறு இனிய
நாடு இடை விலங்கிய எம்வயின், நாள்தொறும்,
அரும் பனி கலந்த அருள் இல் வாடை
தனிமை எள்ளும் பொழுதில்,
5
பனி மலர்க் கண்ணி கூறியது எமக்கே.
தலைவி விடத் தூதாய்ச் சென்ற பாணன் மாற்றம் கூறக் கேட்ட தலைமகன், 'இவ்வாடை வருத்தத்திற்கு மருந்தாக இன்னும் கூற வேண்டும்' எனக் கூறியது. 9
 

 
480
நினக்கு யாம் பாணரேம் அல்லேம்; எமக்கு
நீயும் குருசிலை அல்லை மாதோ
நின் வெங் காதலி தன் மனைப் புலம்பி,
ஈர் இதழ் உண்கண் உகுத்த
5
பூசல் கேட்டும் அருளாதோயே!
தலைமகட்குத் தூதாய்ப் பாசறைக்கண் சென்ற பாணன் தலைமகனை நெருங்கிச் சொல்லியது. 10
 

 
481
சாய் இறைப் பணைத் தோள், அவ் வரி அல்குல்,
சேயிழை மாதரை உள்ளி, நோய் விட
முள் இட்டு ஊர்மதி, வலவ! நின்
புள் இயல் கலி மாப் பூண்ட தேரே.
5
வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகற்குக் கூறியது.
இனி வருகின்ற பாட்டு ஒன்பதிற்கும் இஃது ஒக்கும்.
 

 
482
தெரிஇழை அரிவைக்குப் பெரு விருந்து ஆக
வல்விரைந்து கடவுமதி பாக! வெள் வேல்
வென்று அடு தானை வேந்தனொடு
நாள் இடைச் சேப்பின், ஊழியின் நெடிதே! 2
 

 
483
ஆறு வனப்பு எய்த அலர் தாயினவே;
வேந்து விட்டனனே; மா விரைந்தனவே;
முன்னுறக் கடவுமதி, பாக!
நல் நுதல் அரிவை தன் நலம்பெறவே. 3
 

 
484
வேனில் நீங்கக் கார் மழை தலைஇ,
காடு கவின் கொண்டன்று பொழுது; பாடு சிறந்து
கடிய கடவுமதி, பாக!
நெடிய நீடினம், நேரிழை மறந்தே. 4
 

 
485
அரும் படர் அவலம் அவளும் தீர,
பெருந் தோள் நலம்வர யாமும் முயங்க,
ஏமதி, வலவ! தேரே
மா மருண்டு உகளும் மலர் அணிப் புறவே. 5
 

 
486
பெரும் புன் மாலை ஆனாது நினைஇ,
அரும் படர் உழத்தல் யாவது? என்றும்
புல்லி ஆற்றாப் புரையோள் காண
வள்பு தெரிந்து ஊர்மதி, வலவ! நின்
புள் இயல் கலி மாப் பூண்ட தேரே. 6
 

 
487
இது மன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே;
செறிதொடி உள்ளம் உவப்ப
மதிஉடை வலவ! ஏமதி தேரே. 7
 

 
488
கருவி வானம் பெயல் தொடங்கின்றே;
பெரு விறல் காதலி கருதும் பொழுதே;
விரி உளை நன் மாப் பூட்டி,
பருவரல் தீர, கடவுமதி தேரே! 8
 

 
489
அஞ்சிறை வண்டின் அரியினம் மொய்ப்ப,
மென் புல முல்லை மலரும் மாலை,
பையுள் நெஞ்சின் தையல் உவப்ப,
நுண் புரி வண் கயிறு இயக்கி, நின்
வண் பரி நெடுந் தேர் கடவுமதி, விரைந்தே. 9
 

 
490
அம் தீம் கிளவி தான் தர, எம் வயின்
வந்தன்று
.....................................................................................................
ஆய் மணி நெடுந் தேர் கடவுமதி, விரைந்தே. 10
 

 
491
கார் அதிர் காலை யாம் ஓ இன்று நலிய,
நொந்து நொந்து உயவும் உள்ளமொடு
வந்தனெம் மடந்தை! நின் ஏர் தர விரைந்தே.
வினை முற்றிப் புகுந்த தலைமகன் தலைவிக்குச் சொல்லியது. 1
 

 
492
நின்னே போலும் மஞ்ஞை ஆல, நின்
நல் நுதல் நாறும் முல்லை மலர,
நின்னே போல மா மருண்டு நோக்க,
நின்னே உள்ளி வந்தனென்
5
நல் நுதல் அரிவை! காரினும் விரைந்தே.
இதுவும் அது. 2
 

 
493
ஏறு முரண் சிறப்ப, ஏறு எதிர் இரங்க,
மாதர் மான் பிணை மறியொடு மறுக,
கார் தொடங்கின்றே காலை
நேர் இறை முன்கை! நின் உள்ளி யாம் வரவே.
இதுவும் அது. 3
 

 
494
வண்டு தாது ஊத, தேரை தெவிட்ட,
தண் கமழ் புறவின் முல்லை மலர,
இன்புறுத்தன்று பொழுதே;
நின் குறி வாய்த்தனம்; தீர்க, இனிப் படரே!
இதுவும் அது. 4
 

 
495
செந் நில மருங்கில் பல் மலர் தாஅய்,
புலம்பு தீர்ந்து, இனியஆயின, புறவே
பின் இருங் கூந்தல் நல் நலம் புனைய,
உள்ளுதொறும் கலிழும் நெஞ்சமொடு,
5
முள் எயிற்று அரிவை! யாம் வந்தமாறே.
இதுவும் அது. 5
 

 
496
மா புதல் சேர, வரகு இணர் சிறப்ப
மா மலை புலம்ப, கார் கலித்து அலைப்ப,
பேர் அமர்க் கண்ணி! நிற் பிரிந்து உறைநர்
தோள் துணையாக வந்தனர்;
5
போது அவிழ் கூந்தலும் பூ விரும்புகவே.
குறித்த பருவத்தின்கண் தலைமகன் வந்துழி, தோழி தலைமகட்குச் சொல்லியது. 6
 

 
497
குறும் பல் கோதை கொன்றை மலர,
நெடுஞ் செம் புற்றம் ஈயல் பகர,
மா பசி மறுப்ப, கார் தொடங்கின்றே
பேர் இயல் அரிவை! நின் உள்ளிப்
5
போர் வெங் குருசில் வந்தமாறே.

 
498
தோள் கவின் எய்தின; தொடி நிலை நின்றன;
நீள் வரி நெடுங் கண் வாள் வனப்பு உற்றன
ஏந்து கோட்டு யானை வேந்து தொழில் விட்டென,
விரை செலல் நெடுந் தேர் கடைஇ,
5
வரையக நாடன் வந்தமாறே.
இதுவும் அது. 8
 

 
499
பிடவம் மலர, தளவம் நனைய,
கார் கவின் கொண்ட கானம் காணின்,
'வருந்துவள் பெரிது' என, அருந் தொழிற்கு அகலாது,
வந்தனரால், நம் காதலர்
5
அம் தீம் கிளவி! நின் ஆய் நலம் கொண்டே.
இதுவும் அது. 9
 

 
500
கொன்றைப் பூவின் பசந்த உண்கண்,
குன்றக நெடுஞ் சுனைக் குவளை போல,
தொல் கவின் பெற்றன இவட்கே வெல் போர்
வியல் நெடும் பாசறை நீடிய
5
வய மான் தோன்றல் நீ! வந்தமாறே.
 

 
மேல்