77.படைப் பெருமைச் சிறப்பு | | 'எனைப் பெரும் படையனோ, சினப் போர்ப் பொறையன்?' என்றனிர்ஆயின் ஆறு செல் வம்பலிர்! மன்பதை பெயர, அரசு களத்து ஒழிய, கொன்று தோள் ஓச்சிய வென்று ஆடு துணங்கை மீ பிணத்து உருண்ட தேயா ஆழியின், | 5 | பண் அமை தேரும், மாவும், மாக்களும், எண்ணற்கு அருமையின் எண்ணின்றோ இலனே; கந்து கோளீயாது, காழ் பல முருக்கி, உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடி, சேண் பரல் முரம்பின் ஈர்ம் படைக் கொங்கர் | 10 | ஆ பரந்தன்ன செலவின், பல் யானை காண்பல், அவன் தானையானே. | | துறை:உழிஞை அரவம் வண்ணமும் தூக்கும்:அது பெயர்:வென்று ஆடு துணங்கை | |
| |