உழிஞை அரவம் 


77.படைப் பெருமைச் சிறப்பு

'எனைப் பெரும் படையனோ, சினப் போர்ப் பொறையன்?'
என்றனிர்ஆயின்   ஆறு செல் வம்பலிர்!
மன்பதை பெயர, அரசு களத்து ஒழிய,
கொன்று தோள் ஓச்சிய வென்று ஆடு துணங்கை
மீ பிணத்து உருண்ட தேயா ஆழியின்,
5
பண் அமை தேரும், மாவும், மாக்களும்,
எண்ணற்கு அருமையின் எண்ணின்றோ இலனே;
கந்து கோளீயாது, காழ் பல முருக்கி,
உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடி,
சேண் பரல் முரம்பின் ஈர்ம் படைக் கொங்கர்
10
ஆ பரந்தன்ன செலவின், பல்
யானை காண்பல், அவன் தானையானே.

துறை:உழிஞை அரவம்
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:வென்று ஆடு துணங்கை  
உரை