35. வென்றிச் சிறப்பு | | புரை சால் மைந்த! நீ ஓம்பல் மாறே, உரை சான்றனவால், பெருமை நின் வென்றி! இருங் களிற்று யானை இலங்கு வால் மருப்பொடு நெடுந் தேர்த் திகிரி தாய வியன் களத்து, அளகுடைச் சேவல் கிளை புகா ஆர,
| 5 | தலை துமிந்து எஞ்சிய மெய் ஆடு பறந்தலை, அந்தி மாலை விசும்பு கண்டன்ன செஞ் சுடர் கொண்ட குருதி மன்றத்து, பேஎய் ஆடும் வெல்போர் வீயா யாணர் நின்வயினானே.
| 10 | துறை:வாகைத்துறைப் பாடாண் பாட்டு வண்ணம்:அது தூக்கு:செந்தூக்கு பெயர்:மெய் ஆடு பறந்தலை
| |
| |