40.கொடைச் சிறப்பு | | போர் நிழல் புகன்ற சுற்றமொடு ஊர்முகத்து இறாஅலியரோ, பெரும! நின் தானை! இன் இசை இமிழ் முரசு இயம்பக் கடிப்பு இகூஉ, புண் தோள் ஆடவர் போர்முகத்து இறுப்ப, காய்த்த கரந்தை மாக் கொடி விளை வயல் | 5 | வந்து இறைகொண்டன்று, தானை: 'அந்தில், களைநர் யார் இனிப் பிறர்?' எனப் பேணி, மன் எயில் மறவர் ஒலி அவிந்து அடங்க, ஒன்னார் தேய, பூ மலைந்து உரைஇ, வெண் தோடு நிரைஇய வேந்துடை அருஞ் சமம் | 10 | கொன்று புறம்பெற்று, மன்பதை நிரப்பி, வென்றி ஆடிய தொடித் தோள் மீ கை, எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து, பொன்அம் கண்ணி, பொலந் தேர் நன்னன் சுடர் வீ வாகைக் கடி முதல் தடிந்த | 15 | தார் மிகு மைந்தின், நார்முடிச் சேரல்! புன் கால் உன்னம் சாய, தெண் கண் வறிது கூட்டு அரியல் இரவலர்த் தடுப்ப, தான் தர உண்ட நனை நறவு மகிழ்ந்து, நீர் இமிழ் சிலம்பின் நேரியோனே: | 20 | செல்லாயோதில், சில் வளை விறலி! மலர்ந்த வேங்கையின் வயங்கு இழை அணிந்து, மெல் இயல் மகளிர் எழில் நலம் சிறப்ப, பாணர் பைம் பூ மலைய, இளையர் இன் களி வழாஅ மென் சொல் அமர்ந்து, | 25 | நெஞ்சு மலி உவகையர் வியன் களம் வாழ்த்த, தோட்டி நீவாது, தொடி சேர்பு நின்று, பாகர் ஏவலின், ஒண் பொறி பிசிர, காடு தலைக் கொண்ட நாடு காண் அவிர் சுடர் அழல் விடுபு, மரீஇய மைந்தின், | 30 | தொழில் புகல் யானை நல்குவன், பலவே. | | துறை:விறலி ஆற்றுப்படை வண்ணமும் தூக்கும்:அது பெயர்:நாடு காண் அவிர் சுடர் | |
| |