பக்கம் எண் :

293

உயவுங் கோதை யூரலந் தித்தி்
ஈரிதழ் மழைக்கட் பேரிய லரிவை
ஒள்ளித ழவிழகங் கடுக்குஞ் சீறடிப்
 
20பல்சில கிண்கிணி சிறுபர டலைப்பக்
கொல்புனற் றளிரி னடுங்குவன ணின்றுநின்
எறிய ரோக்கிய சிறுசெங் குவளை
ஈயென விரப்பவு மொல்லா ணீயெமக்
கியாரை யோவெனப் பெயர்வோள் கையதை
 
25கதுமென வுருத்த நோக்கமோ டதுநீ
பாஅல் வல்லா யாயினை பாஅல்
யாங்கு வல்லுநையோ வாழ்கநின் கண்ணி
அகலிரு விசும்பிற் பகலிடந் தரீஇயர்
தெறுகதிர் திகழ்தரு முருகெழு ஞாயிற்
 
30றுருபுகிளர் வண்ணங் கொண்ட
வான்றோய் வெண்குடை வேந்தர்தம் மெயிலே.
 

துறை : குரவை நிலை.
வண்ணம்  : ஒழுகுவண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர்  : சிறுசெங்குவளை.

1 - 12. கொடி நுடங்கு ............ கேட்டிகும்.  

உரை :  அருங்கலம் தரீஇயர் -  பிற நாடுகளி  னின்று   அரிய
பொருள்களைக்   கொண்டு   வருதற்காக  ;  நீர்மிசை    நிவக்கும்-
கடலின்மேல்  மிதந்து  செல்லும்  ;  பெருங்கலி  வங்கம்  -  பெரிய
ஆரவாரத்தை  யுடைய  கப்பல்கள்  ;  திசை திரிந்தாங்கு - செல்லுந்
திசைகளிலே  திரிந்து செல்வது போல ; கொடி நுடங்கு நிலைய கொல்
களிறு  மிடைந்து  -  கொடிகள்  அசையும்  நிலையை யுடைய போர்
யானைகள்   செறிந்து  திரிதலால்  ;  வடிமணி  நெடுந்தேர்  வடித்த
வோசையினையுடைய  மணிகட்டிய  நெடிய  தேர்களை ; வேறு புலம்
பரப்பி  - வேறிடங்களில் பரவிச் செல்வித்து ; மையணிந்து எழுதருமா
இரும்பல்தோல் - மழைமேகம் போலக் கருத்தெழும் பெரிய பலவாகிய
கேடகங்களுடன்  ;  எஃகு  சுமந்து வேலும் வாளும்  ஏந்திக்கொண்டு ;
முன்  சமத்து - போரின் முன்னணியில் நின்று பொருதலை  விரும்பி ;
மெய்புதை  அரணம்  எண்ணாது  -  மெய்யை  மூடும் கவசத்தையும்
வேண்டுமென் றெண்ணாமல் விரைந்து ; எழுதரும் வன்கண்  ஆடவர்-