78.வென்றிச் சிறப்பு | | வலம் படு முரசின் இலங்குவன விழூஉம் அவ் வெள் அருவி உவ் வரையதுவே சில் வளை விறலி! செல்குவை ஆயின், வள் இதழ்த் தாமரை நெய்தலொடு அரிந்து, மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலி, | 5 | கிளி கடி மேவலர் புறவுதொறும் நுவல, பல் பயன் நிலைஇய கடறுடை வைப்பின், வெல்போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும் வில் பயில் இறும்பின், தகடூர் நூறி, பேஎ மன்ற பிறழ நோக்கு இயவர் | 10 | ஓடுறு கடு முரண் துமியச் சென்று, வெம் முனை தபுத்த காலை, தம் நாட்டு யாடு பரந்தன்ன மாவின், ஆ பரந்தன்ன யானையோன் குன்றே. | | துறை:விறலி ஆற்றுப்படை வண்ணமும் தூக்கும்:அது பெயர்:பிறழ நோக்கு இயவர் | |
| |