13. வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தல் சிறப்பும் | | தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும், ஏறு பொருத செறு உழாது வித்துநவும், கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல் இருங் கண் எருமை நிரை தடுக்குநவும், கலி கெழு துணங்கை ஆடிய மருங்கின் | 5 | வளைதலை மூதா ஆம்பல் ஆர்நவும், ஒலி தெங்கின், இமிழ் மருதின், புனல் வாயில், பூம் பொய்கை, பாடல் சான்ற பயம் கெழு வைப்பின், நாடு கவின் அழிய, நாமம் தோற்றி; | 10 | கூற்று அடூஉ நின்ற யாக்கை போல, நீ சிவந்து இறுத்த நீர்அழி பாக்கம் விரி பூங் கரும்பின் கழனி புல்லென, திரி காய் விடத்தரொடு கார் உடை போகி, கவைத் தலைப் பேய் மகள் கழுது ஊர்ந்து இயங்க, | 15 | ஊரிய நெருஞ்சி நீறு ஆடு பறந்தலை தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து உள்ளம் அழிய, ஊக்குநர், மிடல் தபுத்து, உள்ளுநர் பனிக்கும் பாழ் ஆயினவே. காடே கடவுள் மேன; புறவே | 20 | ஒள் இழை மகளிரொடு மள்ளர் மேன; ஆறே அவ் அனைத்து: அன்றியும், ஞாலத்துக் கூலம் பகர்நர் குடி புறந்தராஅ, குடி புறந்தருநர் பாரம் ஓம்பி, அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது | 25 | மழை வேண்டு புலத்து மாரி நிற்ப, நோயொடு பசி இகந்து ஒரீஇ, பூத்தன்று பெரும! நீ காத்த நாடே! | | துறை:செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம்:ஒழுகு வண்ணம் தூக்கு:செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர்:பூத்த நெய்தல் | |
| |