66.வென்றிச் சிறப்புடன் படுத்து, கொடைச் சிறப்புக் கூறுதல் | | வாங்கு இரு மருப்பின் தீம் தொடை பழுனிய இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணி, படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல! 'இடி இசை முரசமொடு ஒன்றுமொழிந்து, ஒன்னார் வேலுடைக் குழூஉச் சமம் ததைய நூறி, | 5 | கொன்று புறம் பெற்ற பிணம் பயில் அழுவத்து, தொன்று திறை தந்த களிற்றொடு, நெல்லின் அம்பண அளவை விரிந்து உறை போகிய ஆர் பதம் நல்கும்' என்ப கறுத்தோர் உறு முரண் தாங்கிய தார் அருந் தகைப்பின், | 10 | நாள் மழைக் குழூஉச் சிமை கடுக்கும் தோன்றல் தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின், தார் புரிந்தன்ன வாளுடை விழவின், போர் படு மள்ளர் போந்தொடு தொடுத்த கடவுள் வாகைத் துய் வீ ஏய்ப்ப, | 15 | பூத்த முல்லைப் புதல் சூழ் பறவை கடத்திடைப் பிடவின் தொடைக் குலைச் சேக்கும், வான் பளிங்கு விரைஇய, செம் பரல் முரம்பின், இலங்கு கதிர்த் திரு மணி பெறூஉம் அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே. | 20 | துறை:செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணமும் தூக்கும்:அது பெயர்:புதல் சூழ் பறவை | |
| |