29.வென்றிச் சிறப்பு | | அவல் எறி உலக்கை வாழைச் சேர்த்தி, வளைக் கை மகளிர் வள்ளை கொய்யும், முடந்தை நெல்லின் விளைவயல் பரந்த தடந் தாள் நாரை இரிய; அயிரைக் கொழு மீன் ஆர்கைய மரம்தொறும் குழாஅலின், | 5 | வெண் கை மகளிர் வெண் குருகு ஓப்பும், அழியா விழவின், இழியாத் திவவின், வயிரிய மாக்கள் பண் அமைத்து எழீஇ, மன்றம் நண்ணி, மறுகு சிறை பாடும் அகன் கண் வைப்பின் நாடு மன் அளிய! | 10 | விரவு வேறு கூலமொடு குருதி வேட்ட மயிர் புதை மாக் கண் கடிய கழற, அமர் கோள் நேர் இகந்து, ஆர் எயில் கடக்கும் பெரும் பல் யானைக் குட்டுவன் ஆவரம்பு இல் தானை பரவா ஆங்கே. | 15 | துறை:வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு வண்ணமும் தூக்கும்:அது பெயர்:வெண் கை மகளிர் | |
| |