வேளாவிக் கோமான் பதுமன் தேவி  


 நான்காம் பத்து - பதிகம்

ஆராத் திருவின் சேரலாதற்கு
வேளாவிக் கோமான்
பதுமன் தேவி ஈன்ற மகன் முனை
பனிப்பப் பிறந்து, பல் புகழ் வளர்த்து,
ஊழின் ஆகிய உயர் பெருஞ் சிறப்பின்  
5
பூழிநாட்டைப் படையெடுத்துத் தழீஇ,
உருள் பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை
நிலைச் செருவின் ஆற்றலை அறுத்து, அவன்
பொன் படு வாகை முழுமுதல் தடிந்து,
குருதிச் செம் புனல் குஞ்சரம் ஈர்ப்ப,   
10
செருப் பல செய்து, செங்களம் வேட்டு,
துளங்கு குடி திருத்திய வளம் படு வென்றிக்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைக்
காப்பியாற்றுக் காப்பியனார் பாடினார் பத்துப் பாட்டு.

அவைதாம்:
கமழ் குரல் துழாய், கழை அமல் கழனி, வரம்பு
இல் வெள்ளம், ஒண் பொறிக் கழற் கால், மெய் ஆடு பறந்தலை,
வாள் மயங்கு கடுந் தார், வலம்படு வென்றி, பரிசிலர் வெறுக்கை,
ஏவல் வியன் பணை, நாடு காண் அவிர் சுடர்: இவை பாட்டின்
பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில்:நாற்பது நூறாயிரம் பொன் ஒருங்கு
கொடுத்துத் தான் ஆள்வதில் பாகம் கொடுத்தான் அக்கோ.
களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் இருபத்தையாண்டு
வீற்றிருந்தான்.

உரை