இரண்டாம் பத்து - பதிகம் | | மன்னிய பெரும் புகழ், மறு இல் வாய்மொழி, இன் இசை முரசின், உதியஞ்சேரற்கு வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன் அமைவரல் அருவி இமையம் வில் பொறித்து, இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்கத் | 5 | தன்கோல் நிறீஇ, தகை சால் சிறப்பொடு பேர் இசை மரபின் ஆரியர் வணக்கி, நயன் இல் வன் சொல் யவனர்ப் பிணித்து, நெய் தலைப் பெய்து, கை பிற் கொளீஇ, அரு விலை நன்கலம் வயிரமொடு கொண்டு, | 10 | பெரு விறல் மூதூர்த் தந்து, பிறர்க்கு உதவி, அமையார்த் தேய்த்த அணங்குடை நோன் தாள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க்கண்ணனார் பாடினார் பத்துப் பாட்டு. | | அவைதாம்:புண் உமிழ் குருதி, மரம் வீங்கு பல் புகழ், பூத்த நெய்தல், சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயில் இன் பாயல், வலம் படு வியன் பணை, கூந்தல் விறலியர், வளன் அறு பைதிரம், அட்டு மலர் மார்பன்: இவை பாட்டின் பதிகம். | | பாடிப் பெற்ற பரிசில்:உம்பற்காட்டு ஐந்நூறு ஊர் பிரம தாயம் கொடுத்து, முப்பத்து எட்டு யாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகம் கொடுத்தான் அக் கோ. | | இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்து எட்டுயாண்டு வீற்றிருந்தான். | |
|
|