ஏழாம் பத்து - பதிகம் | | மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த நெடு நுண் கேள்வி அந்துவற்கு ஒரு தந்தை ஈன்ற மகள், பொறையன் பெருந்தேவி, ஈன்ற மகன், நாடு பதி படுத்து, நண்ணார் ஓட்டி, வெருவரு தானை கொடு செருப் பல கடந்து, | 5 | ஏத்தல் சான்ற இடனுடை வேள்வி ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி, மாய வண்ணனை மனன் உறப் பெற்று, அவற்கு ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்து, புரோசு மயக்கி, | 10 | மல்லல் உள்ளமொடு மாசு அற விளங்கிய செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடினார் பத்துப் பாட்டு. | | அவைதாம்: புலாஅம் பாசறை, வரைபோல் இஞ்சி, அருவி ஆம்பல், உரைசால் வேள்வி, நாள் மகிழ் இருக்கை, புதல் சூழ் பறவை, வெண் போழ்க் கண்ணி, ஏம வாழ்க்கை, மண் கெழு ஞாலம், பறைக் குரல் அருவி: இவை பாட்டின் பதிகம். | | பாடிப் பெற்ற பரிசில்:சிறுபுறம் என நூறாயிரம் காணம் கொடுத்து, 'நன்றா' என்னும் குன்று ஏறி நின்று, தன் கண்ணிற் கண்ட நாடு எல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ. | | செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான். | |
|
|