67.கொடைச் சிறப்பு | | கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு பந்தர்ப் பெயரிய பேர் இசை மூதூர், கடன் அறி மரபின் கை வல் பாண! தென் கடல் முத்தமொடு நன் கலம் பெறுகுவை கொல் படை தெரிய, வெல் கொடி நுடங்க, | 5 | வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்ப, பல் களிற்று இன நிரை புலம் பெயர்ந்து இயல்வர, அமர்க்கண் அமைந்த அவிர் நிணப் பரப்பின் குழூஉச் சிறை எருவை குருதி ஆர, தலை துமிந்து எஞ்சிய ஆண் மலி யூபமொடு | 10 | உரு இல் பேய் மகள் கவலை கவற்ற, நாடுடன் நடுங்க, பல் செருக் கொன்று; நாறு இணர்க் கொன்றை வெண் போழ்க் கண்ணியர், வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர், நெறி படு மருப்பின் இருங் கண் மூரியொடு | 15 | வளை தலை மாத்த தாழ் கரும் பாசவர் எஃகு ஆடு ஊனம் கடுப்ப, மெய் சிதைந்து; சாந்து எழில் மறைத்த சான்றோர் பெருமகன் மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய கடும் பறைத் தும்பி சூர் நசைத் தாஅய், | 20 | பறை பண் அழியும் பாடு சால் நெடு வரைக் கல் உயர் நேரிப் பொருநன், செல்வக் கோமான் பாடினை செலினே. | | துறை:பாணாற்றுப்படை வண்ணமும் தூக்கும்:அது பெயர்:வெண் போழ்க் கண்ணி | |
|
|