84.வென்றிச் சிறப்பு | | எடுத்தேறு ஏய கடிப்புடை அதிரும் போர்ப்பு உறு முரசம் கண் அதிர்ந்தாங்கு, கார் மழை முழக்கினும், வெளில் பிணி நீவி, நுதல் அணந்து எழுதரூஉம் தொழில் நவில் யானை, பார்வல் பாசறைத் தரூஉம் பல் வேல், | 5 | பூழியர் கோவே! பொலந் தேர்ப் பொறைய, மன்பதை சவட்டும் கூற்ற முன்ப! கொடி நுடங்கு ஆர் எயில் எண்ணு வரம்பு அறியா; பல் மா பரந்த புலம் ஒன்று என்று எண்ணாது, வலியை ஆதல் நற்கு அறிந்தனர்ஆயினும், | 10 | வார் முகில் முழக்கின் மழ களிறு மிகீஇ, தன் கால் முளை மூங்கில் கவர் கிளை போல, உய்தல் யாவது நின் உடற்றியோரே, வணங்கல் அறியார், உடன்று எழுந்து உரைஇ? போர்ப்புறு தண்ணுமை ஆர்ப்பு எழுந்து நுவல, | 15 | நோய்த் தொழில் மலைந்த வேல் ஈண்டு அழுவத்து, முனை புகல் புகல்வின் மாறா மைந்தரொடு, காஞ்சி சான்ற செருப் பல செய்து, நின் குவவுக் குரை இருக்கை இனிது கண்டிகுமே | 20 | காலை, மாரி பெய்து, தொழில் ஆற்றி, விண்டு முன்னிய புயல் நெடுங் காலை, கல் சேர்பு மா மழை தலைஇ, பல் குரல் புள்ளின் ஒலி எழுந்தாங்கே! | | துறை:வாகை வண்ணமும் தூக்கும்:அது பெயர்:தொழில் நவில் யானை | |
|
|