31.மன்னற்கு உரிய மாட்சிமையெல்லாம் எடுத்து ஒருங்கே புகழ்தல் | | குன்று தலைமணந்து, குழூஉக் கடல் உடுத்த மண் கெழு ஞாலத்து, மாந்தர் ஒராங்குக் கை சுமந்து அலறும் பூசல், மாதிரத்து நால் வேறு நனந் தலை, ஒருங்கு எழுந்து ஒலிப்ப, தெள் உயர் வடி மணி எறியுநர் கல்லென, | 5 | உண்ணாப் பைஞ்ஞிலம் பனித் துறை மண்ணி, வண்டு ஊது பொலி தார், திரு ஞெமர் அகலத்து, கண் பொரு திகிரி, கமழ் குரல் துழாஅய் அலங்கல், செல்வன் சேவடி பரவி, நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதிப் பெயர | 10 | மணி நிற மை இருள் அகல, நிலா விரிபு, கோடு கூடு மதியம் இயலுற்றாங்கு, துளங்கு குடி விழுத் திணை திருத்தி, முரசு கொண்டு, ஆண் கடன் இறுத்த நின் பூண் கிளர் வியல் மார்பு, கருவி வானம் தண் தளி தலைஇய, | 15 | வட தெற்கு விலங்கி, விலகு தலைத்து எழிலிய, பனி வார் விண்டு விறல் வரையற்றே; கடவுள் அஞ்சி வானத்து இழைத்த தூங்கு எயில் கதவம் காவல் கொண்ட எழூஉ நிவந்தன்ன, பரேர் எறுழ் முழவுத் தோள்; | 20 | வெண் திரை முந்நீர் வளைஇய உலகத்து, வண் புகழ் நிறுத்த வகை சால் செல்வத்து வண்டன் அனையைமன் நீயே; வண்டு பட ஒலிந்த கூந்தல், அறம் சால் கற்பின், குழைக்கு விளக்கு ஆகிய ஒள் நுதல், பொன்னின் | 25 | இழைக்கு விளக்கு ஆகிய அவ் வாங்கு உந்தி, விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த செம்மீன் அனையள், நின் தொல் நகர்ச் செல்வி; நிலன் அதிர்பு இரங்கல ஆகி, வலன் ஏர்பு, வியன் பணை முழங்கும் வேல் மூசு அழுவத்து, | 30 | அடங்கிய புடையல், பொலங் கழல் நோன் தாள், ஒடுங்காத் தெவ்வர் ஊக்கு அறக் கடைஇ, புறக்கொடை எறியார், நின் மறப் படை கொள்ளுநர்; நகைவர்க்கு அரணம் ஆகி, பகைவர்க்குச் சூர் நிகழ்ந்தற்று, நின் தானை; | 35 | போர் மிகு குருசில்! நீ மாண்டனை பலவே. | | துறை:செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம்:ஒழுகு வண்ணம் தூக்கு:செந்தூக்கு பெயர்:கமழ் குரல் துழாய் | |
|
|